மே 07
இன்று உலகப் புகழ்பெற்ற வங்க மொழிக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள்
(May 7, 1861)
இவர் இயற்றிய கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார்.
இந்தியாவின் தேசியகீதமான ‘ஜன கண மன’ பாடலை இயற்றியவர்.
இவர் மக்களால் அன்பாக குருதேவ் என்று அழைக்கப்பட்டார்.
இவருடைய மற்றொரு பாடல் ‘அமர் சோனார் பங்களா’ வங்காளதேசத்தின் தேசிய கீதமாக உள்ளது.
இவ்வாறு இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களை இயற்றிய பெருமை உலகில் வேறு எவருக்கும் கிடையாது.
தாகூர் ஒரு புகழ்பெற்ற ஓவியரும் கூட !
இவர் 60 வயதுக்குப் பின்னரே ஒவியங்கள் வரைய ஆரம்பித்தார்.
இவரது ஒவியங்கள் நவீன பாணி ஓவியங்களாகும்.
உலக நாடுகள் பலவற்றிலும் நடைபெற்ற ஒவியக் கண் காட்சிகளில் இவரது ஒவியங்கள் இடம்பெற்று விருதுகளும் பெற்றுள்ளன.
சிறப்பு செய்திக்காக
ஆ சூரியா
www.dcbworldrecords.com
கருத்துகள்