முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சதுரங்கத்தில் சாதனை சுபஸ்ரீ

 

சதுரங்கத்தில் சாதனை

சாதாரண கிராமத்தில் மண் வாசனையோடு களம் காண தெரியாமல் இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை அடையாளம் காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆனால்  அமரபூண்டியை சேர்ந்த மாற்றத்திற்கான மாற்றுத்திறனாளி, தன்னம்பிக்கை நாயகன் முருகானந்தம் அவர்கள் அவரது மூத்த மகளான சுபஸ்ரீயை அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் (சதுரங்கம்)  பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை  பெற செய்துள்ளார். ஆம் வாசகர்களே.....

விழிப்புணர்வு போட்டி

கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்  ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது. அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது.இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த சதுரங்க போட்டியில் சுமார் 37 மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

பாராட்டு விழா

    கடந்த ஜூலை மாதம் 25 ம் தேதி  ஒட்டன்சத்திரத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கூடுதல் வட்டாட்சியர் தினேஷ் குமார் தலைமை தாங்கினார்.உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அரசு சக்கரபாணி அவர்கள் கலந்துகொண்டு சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி உள்ளார்.

சுற்றுலா

தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் ஒட்டன்சத்திரத்தில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்று செஸ்  ஒலிம்பியாட் நடைபெறுவதை நேரில் கண்டு களிக்க செய்துள்ளனர்.மாணவ,மாணவிகளுக்கு நல்ல வாய்ப்புகளாகவே அமைந்துள்ளது .

இல்லம் தேடி கௌரவித்த பழனி நவரத்னா

     

    இல்லம் தேடி நேற்று (29.028.2022)அமரபூண்டியை நோக்கி வருகை தந்துள்ளனர்.  பழனி நவரத்னா தங்க மாளிகை இதுவரை ஆசிரியர்கள்,


சாதனையாளர் கௌரவித்தும், கலைப் போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு கேடையம் வழங்குவது வழக்கம் என்பது  குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் "ஸ்போர்ட்ஸ் டே "கௌரவிக்கும் விதமாக இன்று இல்லம் தேடி சுபஸ்ரீயை இன்று கௌரவிக்கப்பட்டு மேலும் வெற்றி பெற வாழ்த்து கூறி சென்றனர்.இதனால் பெற்றோர்கள் மகிழ்ச்சி பொங்க ஊக்கப்படுத்த நாங்களும் தொடர்ந்து பயணிப்போம் என கூறியுள்ளனர்.


அதுமட்டுமின்றி பழனி நவரத்னா தங்க மாளிகை நிர்வாகத்திற்கும் பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.இவரை போன்ற திறமையாளர்களை நாமும் வாழ்த்துவோம்.

#DailyNews  #sunamisudarmonthlymagazine

#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya

#dcbworldrecords  #adjudicatorteam  #adjudicator  #dcbnews

#Newtalents #dcbCreativity  #dcbindia  #dcbtalents

 #dcbadjudicator  #dcbnews  #dcbrecords  #Creator  #explore

#dcbinternationalrecordswrrf  #editorsuriya  #adjudicatorsuriya

#dcbworldrecords #dcbwrrf  

User-Agent: * Allow: /ads/preferences/ Allow: /dtt/k Allow: /gpt/ Allow: /pagead/show_ads.js Allow: /pagead/js/adsbygoogle.js Allow: /pagead/*/show_ads_impl.js Allow: /static/glade.js Allow: /static/glade/ Allow: /tag/js/ Disallow: / Noindex: /

சுனாமி சுடர் மாத இதழ்  இணை ஆசிரியர்   மதிப்புறு முனைவர் .சூரியா


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும், சூப்பர் ஆரட்ஸ் நிறுவனருமான சூப்பர் சின்னப்பா அவர்கள் தர்மம் வெல்லும்  எனும் வார்த்தைகளால் ஓவியம் வரைந்து அசத்தல்.. இன்று  பிறந்தநாள் விழா காணும் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் கட்சியின் தலைவர், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 அடி நீளமும் 10 அடி அகலமும்  கொண்ட பதாகையில் தொடர்ந்து 5 மணி நேரம் தர்மம் வெல்லும் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரின் படத்தினை வரைந்து விரைவில் பூரண நலம் பெற ஓவியக் கலைஞராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.          ஓவியத்தில் இது போன்ற முயற்சி முதன்மையானது. எனவும் இதற்கு முன்பு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்திருந்தாலும் அவற்றில் இது மிகவும் கடினமானதாகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார் இந்த ஓவியம் நிச்சயம் குணப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நாமும் நம்பிக்கையோடு வாழ்த்துவோம்5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும் சூப்பர் ஆரட்ஸ் நிறுவன வருமான சூப்பர் சின்னப்பா அவர்கள்

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் . #DcbTn #DcbTamilCulture #DcbTale