முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்சியை சேர்ந்த 2 வயது சிறுமி வில்வித்தையில் உலக சாதனை

திருச்சியை சேர்ந்த 2 வயது சிறுமி வில்வித்தையில் உலக சாதனை



 


திருச்சியை சேர்ந்த 2 வயது சிறுமி வில்வித்தையில் உலக சாதனை தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் 161 அம்புகளை எய்து அசத்தல்.

திருச்சி, 

திருச்சி சீனிவாசாநகரை சேர்ந்தவர் சகாய விஜய் ஆனந்த்-ஜெயலட்சுமி தம்பதியினரின் 2 வயது சிறுமி ஆராதனா. சகாய விஜய் ஆனந்த் திருச்சி கோட்ட ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணி செய்கிறார். விளையாட்டில் ஆர்வமிக்க, சிறுமி ஆராதனாவுக்கு கடந்த 3 மாதமாக வில்வித்தை பயிற்சி அளிக்கப்பட்டது. ராக்போர்ட் வில்வித்தை கழக பயிற்சியாளர் ராஜதுரை பயிற்சி அளித்தார்.

இந்த நிலையில் வில்வித்தையில் சாதனை படைக்கும் நிகழ்ச்சி பிரபலங்கள் முன்னிலையில் நேற்று திருச்சி ரெயில்வே மண்டபத்தில் நடந்தது. 10 மீட்டர் தூரத்தில் இருந்து, குறிப்பிட்ட இலக்கை ஆராதனா தொடர்ச்சியாக 1 மணி நேரம் வில்லில் இருந்து அம்புகளை எய்தது. இன்னும் முழுமையாக பேசத்தெரியாத சிறுமி ஆராதனா, எவ்வித அச்சமும் இன்றி 1 மணி நேரம் தொடர்ச்சியாக 161 அம்புகளை எய்து 355 புள்ளிகள் பெற்றது. இது உலகசாதனை ஆகும். நடுவராக கராத்தே பள்ளி நிர்வாகி டிராகன் ஜெட்லி செயல்பட்டார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வில்வித்தை சங்க பொது செயலாளர் உதயகுமார், முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்டு, அ.ம.மு.க. நிர்வாகிகள் சரவணன், காசி மகேஸ்வரன், திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆராதனாவை ஊக்கப்படுத்தி பாராட்டினர்.

ஏற்கனவே, ஆராதனா கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த வில்வித்தை போட்டியில் 6 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்று 3-ம் பரிசை பெற்றார். 10 வயதில் செய்யக்கூடிய வில்வித்தை இலக்கினை 2 வயதில் செய்திருக்கிறது என்றும், இந்த வயதில் 3 மீட்டர் தூரம்தான் இலக்கு நிர்ணயிக்கப்படும். ஆனால், 10 மீட்டர் தூர இலக்கினை நோக்கி அம்பு எய்த நிகழ்வு உலகசாதனை ஆகும் என்று நடுவர்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


#DailyNews  #sunamisudarmonthlymagazine

#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya

#dcbworldrecords  #adjudicatorteam  #adjudicator  #dcbnews

#Newtalents #dcbCreativity  #dcbindia  #dcbtalents

 #dcbadjudicator  #dcbnews  #dcbrecords  #Creator  #explore

#dcbinternationalrecordswrrf  #editorsuriya  #adjudicatorsuriya

#dcbworldrecords #dcbwrrf  

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

“The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity”

சேலம் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளின் அம்பேத்கர் கலைப்படைப்பு அதிகாரப்பூர்வமாக DCB WORLD RECORDS நிறுவனம் உலக சாதனையாக பதிவு. சேலம் 29: சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் 8,21,547 பெருவிரல் கை ரேகைகளைப் பயன்படுத்தி 48.5 அடி நீளமும் 68 அடி அகலமுமான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் ஒரு பிரமாண்டமான போர்ட்ரேட் (ஓவியம்), வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர் . டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ நிறுவனம் “The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity” என்ற தலைப்பில் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஆ. சூரியா மற்றும் விருந்தினராக டாக்டர்.நட்சத்திரா,அப்துல் ரஹீம், மற்றும் ரகுமான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சாதனையை நேரடியாக ஆய்வு செய்து, உலக சாதனையின் அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தனர். இதன் பின்னர், ஒரு சிறப்பு நிகழ்வில் உலக சாதனை சான்றிதழை டாக்டர் ஆ. சூரியா மற்றும் டாக்டர் நட்சத்திரா ஆகியோர் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா, பேராசிரியர்.தீபக் குமார் VIB...

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்!

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்! 🎨✨ திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி அ.உதய நந்தினி, மக்களின் மனம் கவர்ந்த திட்டங்களைத் தொகுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல் வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பணிவான மரியாதையாக அக்கருவை வரைந்து வழிகாட்டியுள்ளார். அவர் இதுபோன்ற உழைப்பால் தழுவிய உணர்வை முறைமையாக வெளிப்படுத்தி, "மீண்டும் வெல்வோம், வெற்றி கொள்வோம்" என்று உற்சாகம் ஊட்டியுள்ளார். மேலும் இச்செயல் மக்களுக்கு தலைவர் வழிகாட்டும் முக்கியத்துவத்தையும், படைப்புத் திறமைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். #பழனி #கலைபோட்டி #பயிற்சி #மாணவர்கள் #பழனி #மாணவிஓவியம் #அசத்தல்கலை #தமிழ்இலக்கு #ArteTamil #ArtistOnInstagram #CreativeTamil #ArtLovers #TamilArtistry #InstaArt #DCBAUDHAYANATHINI #UDHAYANANTHINIPALANI #UDHAYANANTHINIART

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் ...