முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்சியை சேர்ந்த 2 வயது சிறுமி வில்வித்தையில் உலக சாதனை

திருச்சியை சேர்ந்த 2 வயது சிறுமி வில்வித்தையில் உலக சாதனை



 


திருச்சியை சேர்ந்த 2 வயது சிறுமி வில்வித்தையில் உலக சாதனை தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் 161 அம்புகளை எய்து அசத்தல்.

திருச்சி, 

திருச்சி சீனிவாசாநகரை சேர்ந்தவர் சகாய விஜய் ஆனந்த்-ஜெயலட்சுமி தம்பதியினரின் 2 வயது சிறுமி ஆராதனா. சகாய விஜய் ஆனந்த் திருச்சி கோட்ட ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணி செய்கிறார். விளையாட்டில் ஆர்வமிக்க, சிறுமி ஆராதனாவுக்கு கடந்த 3 மாதமாக வில்வித்தை பயிற்சி அளிக்கப்பட்டது. ராக்போர்ட் வில்வித்தை கழக பயிற்சியாளர் ராஜதுரை பயிற்சி அளித்தார்.

இந்த நிலையில் வில்வித்தையில் சாதனை படைக்கும் நிகழ்ச்சி பிரபலங்கள் முன்னிலையில் நேற்று திருச்சி ரெயில்வே மண்டபத்தில் நடந்தது. 10 மீட்டர் தூரத்தில் இருந்து, குறிப்பிட்ட இலக்கை ஆராதனா தொடர்ச்சியாக 1 மணி நேரம் வில்லில் இருந்து அம்புகளை எய்தது. இன்னும் முழுமையாக பேசத்தெரியாத சிறுமி ஆராதனா, எவ்வித அச்சமும் இன்றி 1 மணி நேரம் தொடர்ச்சியாக 161 அம்புகளை எய்து 355 புள்ளிகள் பெற்றது. இது உலகசாதனை ஆகும். நடுவராக கராத்தே பள்ளி நிர்வாகி டிராகன் ஜெட்லி செயல்பட்டார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வில்வித்தை சங்க பொது செயலாளர் உதயகுமார், முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்டு, அ.ம.மு.க. நிர்வாகிகள் சரவணன், காசி மகேஸ்வரன், திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆராதனாவை ஊக்கப்படுத்தி பாராட்டினர்.

ஏற்கனவே, ஆராதனா கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த வில்வித்தை போட்டியில் 6 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்று 3-ம் பரிசை பெற்றார். 10 வயதில் செய்யக்கூடிய வில்வித்தை இலக்கினை 2 வயதில் செய்திருக்கிறது என்றும், இந்த வயதில் 3 மீட்டர் தூரம்தான் இலக்கு நிர்ணயிக்கப்படும். ஆனால், 10 மீட்டர் தூர இலக்கினை நோக்கி அம்பு எய்த நிகழ்வு உலகசாதனை ஆகும் என்று நடுவர்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


#DailyNews  #sunamisudarmonthlymagazine

#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya

#dcbworldrecords  #adjudicatorteam  #adjudicator  #dcbnews

#Newtalents #dcbCreativity  #dcbindia  #dcbtalents

 #dcbadjudicator  #dcbnews  #dcbrecords  #Creator  #explore

#dcbinternationalrecordswrrf  #editorsuriya  #adjudicatorsuriya

#dcbworldrecords #dcbwrrf  

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும், சூப்பர் ஆரட்ஸ் நிறுவனருமான சூப்பர் சின்னப்பா அவர்கள் தர்மம் வெல்லும்  எனும் வார்த்தைகளால் ஓவியம் வரைந்து அசத்தல்.. இன்று  பிறந்தநாள் விழா காணும் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் கட்சியின் தலைவர், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 அடி நீளமும் 10 அடி அகலமும்  கொண்ட பதாகையில் தொடர்ந்து 5 மணி நேரம் தர்மம் வெல்லும் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரின் படத்தினை வரைந்து விரைவில் பூரண நலம் பெற ஓவியக் கலைஞராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.          ஓவியத்தில் இது போன்ற முயற்சி முதன்மையானது. எனவும் இதற்கு முன்பு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்திருந்தாலும் அவற்றில் இது மிகவும் கடினமானதாகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார் இந்த ஓவியம் நிச்சயம் குணப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நாமும் நம்பிக்கையோடு வாழ்த்துவோம்5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும் சூப்பர் ஆரட்ஸ் நிறுவன வருமான சூப்பர் சின்னப்பா அவர்கள்

சதுரங்கத்தில் சாதனை சுபஸ்ரீ

  சதுரங்கத்தில் சாதனை சாதாரண கிராமத்தில் மண் வாசனையோடு களம் காண தெரியாமல் இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை அடையாளம் காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் . ஆனால்   அமரபூண்டியை சேர்ந்த மாற்றத்திற்கான மாற்றுத்திறனாளி , தன்னம்பிக்கை நாயகன் முருகானந்தம் அவர்கள் அவரது மூத்த மகளான சுபஸ்ரீயை அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் ( சதுரங்கம் )   பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் . திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை   பெற செய்துள்ளார் . ஆம் வாசகர்களே ..... விழிப்புணர்வு போட்டி கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்   ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது . அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது . இதில் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் அரசு உதவி

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் . #DcbTn #DcbTamilCulture #DcbTale