தேதி : 17.5.2020
இடம் : திண்டுக்கல் மாவட்டம், பழனி.
பழனியில் ஜவஹர் நகர் பெட்ரோல் பங்க் முன்பு அடையாளம் தெரியாத பால் வாகனம் ஒன்று சுமார் 3 வயது பிராணி ஒன்றின் மீது வேகமாக மோதி சென்றது. சம்பவ இடத்தில் அந்த பிராணியின் தலையில் (hole) ஆழமான காயம் ஏற்பட்டு அதே இடத்தில் சுருண்டு விழுந்தது.
பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் தீபக் என்பவர் சரியாக 4.30p.m மணிக்கு (SKGSG) விலங்குகள் மற்றும் பறவைகள் நல பாதுகாப்பு அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.
திரு. K. முத்துசாமி ஓவியர் HAWO - AWBI மற்றும்
திரு. M. பார்த்த சாரதி HAWO - AWBI அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த பிராணியை மீட்டு அரசு கால்நடை மருத்துவமனைக்கு மாலை 5.00 மணியளவில் எடுத்து சென்றனர். அங்கு பிராணிக்கு உரிய சிகிச்சையை உயர்திரு டாக்டர். செந்தில்குமார் அளித்தார்.
இப்பிராணி ( SKGSG ) விலங்குகள் பராமரிப்பு பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டது. பிராணியானது நன்கு குணமடைந்த பிறகு அதே பகுதியில் விடப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
மத்திய அரசு (AWBI ),
(SKGSG) விலங்குகள் மற்றும் பறவைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள்,
பழனி & மதுரை.
9994860441.
8754356410.
சிறப்பு செய்தியாளர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
www.dcbworldrecords.com
கருத்துகள்