நேர்மறை எண்ண அலைகளை
பிரபஞ்சம் முழுவதும்
ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வருகின்ற கொரோனா நச்சுயிர் குறித்துத் திரும்பத் திரும்ப எதிர்மறை எண்ணங்களையே பிரபஞ்ச வான்காந்த களத்தில் (Universal Magnetic Field) அழுத்தமாக பதிவு செய்தால் கொரோனா நச்சுயிர் இன்னும் வலுப்பெறும். அச்சத்தாலும், கவலை உணர்ச்சியாலும் நாம் நோயெதிர்ப்பு ஆற்றலை இழக்கும் வாய்ப்பும் உள்ளது.
எனவே, நேர்மறையான எண்ண அலைகளை வான்காந்தக் களத்தில் பதிவுசெய்வோம். நலம் பெறுவோம்.
கொரோனா செய்தியை படித்தாலோ, கேட்டாலோ கீழ்கண்ட நன்றி அலையை பரவ விடுவோம்.
1. நான் நலமாக இருக்கிறேன் - இறைவா உனக்கு நன்றி.
2. என் குடும்பம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி.
3. நான் சார்ந்திருக்கும் சமுதாயம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி.
4. என் தமிழ்நாடு மாநிலம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி.
5. என் இந்திய தேசம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி.
6. நான் வாழும் இந்த வையகம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி.
7. வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!! - இறைவா உனக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!.
கடவுள் மீது நம்பிக்கை இல்லாத நாத்திக பகுத்தறிவாளர்கள் -இயற்கைக்கு நன்றி என்று குறிப்பிடலாம்.
இதனால் நாம் இயல்பாகவே பிரபஞ்ச #நலமளிக்கும்_ஆற்றலை உள்வாங்கி நாமும், நம் குடும்பமும், நம் மாநிலமும், நம் நாடும், உலகமும் மேலும் மேலும் நலமே பெற்று உய்வடைவோம்.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்" -குறள் கூறுவதை ஒப்பிட்டுப் பார்ப்போம்.
வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!!
-இயற்கைக்கு நன்றி!
-இறைவனுக்கு நன்றி!!
-இதைப் படித்தவர்களுக்கு நன்றி!!!
-இதைப் பகிர்ந்தவர்களுக்கு நன்றி!!!!
சிறப்பு செய்தியாளர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
www.dcbworldrecords.com
கருத்துகள்