இசை கலைஞர்களுக்கு செவி சாய்க்குமா????
இசைக்கலையில் ஒருவித தேக்கம்
ஊரிலே ஊரடங்குச் சட்டம், உள்நாட்டு நிலைமை காரணமாகக் கோயில்கள் எல்லாம் கவனிப்பாரற்றுத் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டதாலும், மேளதாளத்தோடு பகிரங்கமாக எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த முடியாததாலும், தவில் நாதஸ்வர இசைக்கலையில் ஒருவித தேக்கம் ஏற்பட்டிருக்கின்றது. இதைவிட தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக நாதஸ்வர இசை பதிவு செய்யப்பட்டதால் பல நிகழ்ச்சிகளில் பதிவு செய்யப்பட்ட நாதஸ்வர இசைத் தட்டுக்களே மங்கல இசைக்காகப் பாவிக்கப்படுகின்றன. இதனால் தவில், நாதஸ்வரக் கலைஞர்களுக்குப் போதிய வருமானம் கடந்த காலங்களில் கிடைக்கவில்லை.
இசை என்பது மொழிகளைக்கடந்த ஒரு தெய்வீக உணர்வு, தமிழ் காலாச்சாரத்தில் தனித்துவம் மிக்க இசைக்கருவியாக நாதஸ்வரமும், தவிலும் வகிக்கின்ற பங்கு மிகவும் முக்கியமானது. நாதஸ்வர இசையுடன்தான் அனேகமான தமிழர்களின் முக்கியமான மங்கல, மகிழ்சிகரமான நிகழ்வுகள் நிகழ்கின்றன.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் பேரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் கீழ் 144 தடைச் சட்டம் 21 நாட்களுக்கு அமுலாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, வரவேற்கத் தக்கது!!!போற்றுதற்குரியது!!!இந்த நிலையில் கிராமியக் இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் மிகவும் பரிதாபமான கேள்விக் குறியாக உள்ளது, பங்குனி மாதத்தில் தான் உத்திரம் திருவிழாகளில் கலைநிகழ்ச்சிகள் அதிகமாகவே நடைபெறும் இதை நம்பித் தான் இசைக்கலைஞர்களின் குடும்பங்களே உள்ளன,இந்நிலையில் நிகழ்ச்சிகள் முழுவதும் தடைசெய்யப்பட்டு விட்டதால் கலையினையே உயிரென மதித்து வாழும் அமரபூண்டி,பூலாம்பட்டி,
மஞ்சநாயக்கன்பட்டி,காளிபட்டி கிராமங்களைச் சுற்றியுள்ள கிராமியக் இசைக் கலைஞர்களுக்கும் ,அவரை சார்ந்து வாழும் குடும்பங்களுக்கும் நிதியுதவி செய்திட சார் ஆட்சியர், வட்டாட்சியர் அவர்கள் தமிழக முதல்வர் அவர்களுக்கு பரிந்துரை செய்திட பணிவோடு கேட்டு கொள்கிறோம் என கிராமிய இசை கலைஞர்கள் கூறினார்கள் .இவர்களின் வாழ்விலும் ஒளிவீசட்டும்.....
கருத்துகள்