முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்கள் சேவையில் சித்தமருத்துவர்

மக்கள் சேவையில் சித்தமருத்துவர்

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் நோய் நாடி நோய் முதல் நாடி ஆராயும் பாங்கு கொண்ட அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவில் தமிழக அரசின் சிறந்த சித்தமருத்துவ விருதுபெற்ற  மாமனிதன் டாக்டர் மகேந்திரன் அவர்கள்   பழனி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு   சித்த மருத்துவத்தை பிரபலமாக்கியவர்.

மருத்துவ பணியில்

மருத்துவ பணியில்     மகத்தான பணியை இடைவிடாது மக்களுக்கு கொண்டு செல்ல முனைப்புடன் செயல்படும்  இவர். நோயாளிகளை கவனிக்கும் கனிவு.  எல்லாமே ஆச்சரியம். எல்லா நோய்க்கும் பாரம்பரிய வைத்தியம் உண்டு என்பதை இவர் விவரிப்பது வித்தியாசமாக இருக்கும். டெங்கு வைரல் காய்சல் வந்த போது நிலவேம்பு கசாயத்தை இலவசமாக அரசு மருத்துவமனையில் வைத்தார். இன்றும் எல்லா வார்டுகளிலும் நிலவேம்பு கசாயம் கேன்கள்  இருக்கும். பழனி பகுதியில் டெங்கு பரவாமல் இருந்ததுக்கு இது ஒரு முக்கிய காரணம் எனலாம்.  இப்போது கொரோனாவிற்கு கபசுர பொடி வியாபாரமான போது பழனி அரசு மருத்துவமனையில் கபசுர குடிநீரை இலவசமாகவும், அவசியமாகவும் கட்டாயம் பருக வேண்டும் மக்களிடம் தினமும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.. பழனி பகுதியில் இது பரவி விட கூடாது என்று இந்த ஐம்பது  நாட்களில் நூற்றிற்கும் மேற்பட்ட கிராமங்களில் பணிக்கு முன்னும் பின்னும் மக்களுக்கு கபசுர குடிநீர் கொடுத்து பழனியில் கொரோனா பரவாமல் தடுத்திருக்கிறார். பாரம்பரிய வைத்தியம் மீண்டும் அந்த நோய் வராமல் தடுப்பதோடு நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கிறது என்பது இவர் கூற்று. ஆனால் நாம் நோய் அவசரம் காரணமாக ஆங்கில வைத்தியத்தில் நோயை மட்டும் குணப்படுத்தி எதிர்ப்பு சக்தியை இழக்கிறோம். நமது பண்டைய உணவில் மஞ்சள் இஞ்சி பூண்டு சுக்கு எலுமிச்சை மிளகு சீரகம் ஏலக்காய் கிராம்பு இவை இருப்பதால் தான் நோய் எதிர்ப்பு சக்தியோடு  கொரோனாவின் வீரியத்தை கட்டுபடுத்தி இருக்கிறோம். என மக்களுக்கு எளிமையாக புரியவைத்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை.          

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சில வரிகள்

பழநிபொதுமக்களுக்கும்.
தன்னார்வலர்களுக்கும், தொண்டுநிறுவனங்களுக்கும். சமூக ஆர்வலர்களுக்கும் மருத்துவரின் ஒர்  அன்பான வேண்டு கோள் கபசுரக்குடிநீர்.நிலவேம்பு கசாயம் உடம்பில் தடுக்கும் எதிர்ப்புசக்திவாய்ந்தாகும்.பொதுமக்கள் பின் பற்ற கூடிய வழி முறைகள். 1)நீங்கள் வீட்டில் உள்ளவர்களிடம்.வெளியில் உள்ளவர்களிடமும் அனுகும்போது கண்டிப்பாக முககவசங்களை அணிந்து கொண்டுதான் பேச வேண்டும்.

2)பொதுவாக மக்கள் கூடும் இடங்களில்  மளிகைகடையோ.காய்கறிகள் வாங்கும்கடையோ.
மருந்துக்கடையோ.இறைச்சிகடைகளிலோ நீங்கள் தனிநபர் இடைவெளிவிட்டு  நிற்க  வேண்டும்.
3)பொது இடங்களில் கபரசுரக்குடிநீர் .நிலவேம்பு கசாயம் தரும்போது நாங்களே உங்கள் இடம் தேடி கசாயத்தை தருகிறோம்.
நீங்கள் அடிக்கடி ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய அன்பான மருத்துவரின் வேண்டுகோள்.
நண்பர்கள்,உற்றார்,உறவினர்கள்,குடுபத்தினர்,சந்திக்கும் பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது கொரனோவைரஸ் கிருமிகள் ஒழிப்பு ஞாபகத்தையும் கை கழுவும்முறையும் எடுத்துக் கூற வேண்டும் .வெளியில் செல்லும் பொழுது முககவசம் அணிந்து கொள்ள வேண்டும்.சமூக தனிநபர் இடை வெளியை பின் பற்றுங்கள்.உயிர் எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கமுடியாது.மனிதர்களின் உயிர்களின் முக்கியம் கருதி இதில் நாம் அனைவரும் பயணம்செய்து உங்கள் பெரும்ஆதரவுடன் கொரனோ என்ற அரக்கனை வெல்வோம்.
என அழகாக மக்களிடையே எடுத்துக் கூறி கபசுர குடிநீர் வழங்கி விட்டு அடுத்த கிராமத்தை நோக்கி பயணிக்கும் இவரது விடா முயற்சி கண்டு வியந்தனர் என சமூக ஆர்வலர்கள் கூறுவது பாரம்பரியத்தை பழகுவோம் என நினைவு படுத்துகிறது.



                       சிறப்பு செய்தியாளர் 
                                  ஆ.சூரியா 
                    சுனாமிசுடர் மாத இதழ்.
             அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர். 
                    www.dcbworldrecords.com 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும், சூப்பர் ஆரட்ஸ் நிறுவனருமான சூப்பர் சின்னப்பா அவர்கள் தர்மம் வெல்லும்  எனும் வார்த்தைகளால் ஓவியம் வரைந்து அசத்தல்.. இன்று  பிறந்தநாள் விழா காணும் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் கட்சியின் தலைவர், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 அடி நீளமும் 10 அடி அகலமும்  கொண்ட பதாகையில் தொடர்ந்து 5 மணி நேரம் தர்மம் வெல்லும் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரின் படத்தினை வரைந்து விரைவில் பூரண நலம் பெற ஓவியக் கலைஞராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.          ஓவியத்தில் இது போன்ற முயற்சி முதன்மையானது. எனவும் இதற்கு முன்பு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்திருந்தாலும் அவற்றில் இது மிகவும் கடினமானதாகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார் இந்த ஓவியம் நிச்சயம் குணப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நாமும் நம்பிக்கையோடு வாழ்த்துவோம்5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும் சூப்பர் ஆரட்ஸ் நிறுவன வருமான சூப்பர் சின்னப்பா அவர்கள்

சதுரங்கத்தில் சாதனை சுபஸ்ரீ

  சதுரங்கத்தில் சாதனை சாதாரண கிராமத்தில் மண் வாசனையோடு களம் காண தெரியாமல் இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை அடையாளம் காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் . ஆனால்   அமரபூண்டியை சேர்ந்த மாற்றத்திற்கான மாற்றுத்திறனாளி , தன்னம்பிக்கை நாயகன் முருகானந்தம் அவர்கள் அவரது மூத்த மகளான சுபஸ்ரீயை அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் ( சதுரங்கம் )   பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் . திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை   பெற செய்துள்ளார் . ஆம் வாசகர்களே ..... விழிப்புணர்வு போட்டி கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்   ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது . அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது . இதில் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் அரசு உதவி

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் . #DcbTn #DcbTamilCulture #DcbTale