மக்கள் சேவையில் சித்தமருத்துவர்
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் நோய் நாடி நோய் முதல் நாடி ஆராயும் பாங்கு கொண்ட அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவில் தமிழக அரசின் சிறந்த சித்தமருத்துவ விருதுபெற்ற மாமனிதன் டாக்டர் மகேந்திரன் அவர்கள் பழனி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு சித்த மருத்துவத்தை பிரபலமாக்கியவர்.
மருத்துவ பணியில் மகத்தான பணியை இடைவிடாது மக்களுக்கு கொண்டு செல்ல முனைப்புடன் செயல்படும் இவர். நோயாளிகளை கவனிக்கும் கனிவு. எல்லாமே ஆச்சரியம். எல்லா நோய்க்கும் பாரம்பரிய வைத்தியம் உண்டு என்பதை இவர் விவரிப்பது வித்தியாசமாக இருக்கும். டெங்கு வைரல் காய்சல் வந்த போது நிலவேம்பு கசாயத்தை இலவசமாக அரசு மருத்துவமனையில் வைத்தார். இன்றும் எல்லா வார்டுகளிலும் நிலவேம்பு கசாயம் கேன்கள் இருக்கும். பழனி பகுதியில் டெங்கு பரவாமல் இருந்ததுக்கு இது ஒரு முக்கிய காரணம் எனலாம். இப்போது கொரோனாவிற்கு கபசுர பொடி வியாபாரமான போது பழனி அரசு மருத்துவமனையில் கபசுர குடிநீரை இலவசமாகவும், அவசியமாகவும் கட்டாயம் பருக வேண்டும் மக்களிடம் தினமும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.. பழனி பகுதியில் இது பரவி விட கூடாது என்று இந்த ஐம்பது நாட்களில் நூற்றிற்கும் மேற்பட்ட கிராமங்களில் பணிக்கு முன்னும் பின்னும் மக்களுக்கு கபசுர குடிநீர் கொடுத்து பழனியில் கொரோனா பரவாமல் தடுத்திருக்கிறார். பாரம்பரிய வைத்தியம் மீண்டும் அந்த நோய் வராமல் தடுப்பதோடு நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கிறது என்பது இவர் கூற்று. ஆனால் நாம் நோய் அவசரம் காரணமாக ஆங்கில வைத்தியத்தில் நோயை மட்டும் குணப்படுத்தி எதிர்ப்பு சக்தியை இழக்கிறோம். நமது பண்டைய உணவில் மஞ்சள் இஞ்சி பூண்டு சுக்கு எலுமிச்சை மிளகு சீரகம் ஏலக்காய் கிராம்பு இவை இருப்பதால் தான் நோய் எதிர்ப்பு சக்தியோடு கொரோனாவின் வீரியத்தை கட்டுபடுத்தி இருக்கிறோம். என மக்களுக்கு எளிமையாக புரியவைத்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சில வரிகள்
பழநிபொதுமக்களுக்கும்.
தன்னார்வலர்களுக்கும், தொண்டுநிறுவனங்களுக்கும். சமூக ஆர்வலர்களுக்கும் மருத்துவரின் ஒர் அன்பான வேண்டு கோள் கபசுரக்குடிநீர்.நிலவேம்பு கசாயம் உடம்பில் தடுக்கும் எதிர்ப்புசக்திவாய்ந்தாகும்.பொதுமக்கள் பின் பற்ற கூடிய வழி முறைகள். 1)நீங்கள் வீட்டில் உள்ளவர்களிடம்.வெளியில் உள்ளவர்களிடமும் அனுகும்போது கண்டிப்பாக முககவசங்களை அணிந்து கொண்டுதான் பேச வேண்டும்.
கருத்துகள்