குளத்து நீர் திருட்டு நடவடிக்கை எடுப்பார்களா??
22.04.2020 அமரபூண்டி காளியப்பன் மகன் தங்கராஜ் என்பவர் அமரபூண்டி பஞ்சாயத்து அலுவலகம் அருகே சர்வே எண் 285 நீர்தேக்க குளம் உள்ளது.மழைகாலத்தில் நீர் தேக்கி வைத்து, குளத்தின் நடுவே அமைத்து மின் மோட்டார் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குளத்தில் உள்ள நீரை நீண்ட நாட்களாக வருவாய்த்துறையிடமோ, ஊராட்சிமன்றத்திடமோ எந்த அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக விவசாயத்திற்கு நீர் பாய்ச்ச மததுக்கடியில் குழாய் அமைத்து மண்ணை போட்டு மூடி மக்களுக்கு கிடைக்கும் குடிநீரை திருடி சுயநலத்திற்காக பயன்படுத்தியுள்ளார். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சார் ஆட்சியர் திருமதி.உமா அவர்களும்,காவல்துறை ஆய்வாளர் திருமதி. முத்துலட்சுமி அவர்களும், கிராம நிர்வாக அலுவலர் திருமதி.சந்திரகலா அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.
சிறப்பு செய்தியாளர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
www.dcbworldrecords.com
கருத்துகள்