கற்பக விருட்சம் அறக்கட்டளை மூலம் விதவைப்பெண்களுக்கு கொரோனா நிவாரண உதவி
சென்னை கற்பக விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக கொரோனா தொற்றுயிர் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சிக்கு அருகிலிருக்கும் வெங்கட்நாயக்கன்பட்டியிலிருக்கும் முத்துலட்சுமிஅழகு அவர்கள் வெங்கட் நாயக்கன்பட்டி மற்றும் அடைக்கம்பட்டி கிராமத்திலிருக்கும் 30க்கும் மேற்பட்ட ஏழை விதவைப்பெண்களுக்கு உதவிடவேண்டி விண்ணப்பித்தார்.
அதன் அடிப்படையில் இன்று (15.6.2020) காலை 11.30 மணிக்கு வெங்கட்நாயக்கன்பட்டி கிராமத்தில் கொரோனா நிவாரணம்(அரிசி/மளிகை/காய்கறிகள்/சுமார் 15 ஆயிரம் மதிப்பில்) வழங்கப்பட்டது.விதவை பெண்களும் மனைவியை இழந்த ஆண்களும் நிவாரணப் பொருட்களை வாங்கி சென்றனர். முடிவில் கிராம மக்கள் சார்பாக திருமதி முத்துலட்சுமிஅழகு கற்பக விருட்சம் அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.
கருத்துகள்