வால்பாறையில் காட்டெருமை தாக்கியதில் இரண்டு தொழிலாளர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பாரி அய்யர்பாடி அப்பர் பாரளை எஸ்டேட் தேயிலைதோட்டப் பகுதியில் எட்டாம் நம்பர் தேயிலைக்காட்டில் இன்று வழக்கம்போல் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர். அப்பொது அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டெருமைகள் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது காட்டெருமைகள் தேயிலை தோட்டத்திற்குள் வருவதைக் கண்ட தோட்டத் தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதில் மணிமேகலை வயது 45 மற்றும் வள்ளியம்மாள் வயது 43 ஆகிய இரண்டு தோட்டத் தொழிலாளர்களை காட்டெருமை முட்டி தூக்கி வீசியுள்ளது உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காட்டெருமையை சத்தம் போட்டு விரட்டியுள்ளனர் .பின்னர் காயமடைந்த இரு பெண்களையும் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது இதில் வள்ளியம்மாள் வயது 43 என்ற பெண்ணிற்கு தோள்பட்டை யில் பலத்த காயம் ஏற்பட்டதால் மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் பின்னர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் காலைவேளையில் காட்டெருமை தேயிலைத் தோட்டத்தில் புகுந்து தேயிலை இலைகள் பறித்துக்கொண்டிருந்தஇரண்டு தொழிலாளர்களை முட்டி தாக்கியதால் அப்பகுதி தொழிலாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்பட்டுள்ளது.
இணை ஆசிரியர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
www.dcbworldrecords.com
கருத்துகள்