பழனி சரக காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்ட காவல் துறை சார்பாக கொரோனோ தொற்று காரணமாக மக்கள் பாதுகாப்பு பணியில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு இன்னல்களை இன்முகத்துடன் நாள்தோறும் சந்தித்து வந்த நிலையில் சென்னை தி.நகர் பகுதியில் தொற்று காரணமாக இரவு பகல் பார்க்காமல் அயராது உழைத்து மக்களை பாதுகாத்து வந்த
தி.நகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளார். அவரின் நேர்மையான பணிக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக பழனி சரக
காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் உயிரிழந்த பாலமுரளிக்கு செம்மார்ந்த வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது..
இணை ஆசிரியர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
www.dcbworldrecords.com
கருத்துகள்