முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 400 பேருக்கு நிவாரண உதவி


சென்னை

கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 400 பேருக்கு நிவாரண உதவி 

          – துவங்கி வைத்து தன்னார்வலர்களை உற்சாகப்படுத்திய செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் துணை ஆணையர் திரு. டாக்டர் கே.பிரபாகர்

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரித்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 400 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



தனியார் தன்னார்வ அமைப்பான டர்னிங் பாயிண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட் முயற்சியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னை புனித தோமையர் மலை மாவட்ட (செயின்ட் தாமஸ் மவுண்ட்) காவல் துணை ஆணையர் திரு.டாக்டர் கே.பிரபாகர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வைத்து தலைமை ஏற்று துவங்கி வைத்தார்.


மேலும் அவர், சென்னை காவல் துறை என்றுமே பொதுமக்களுக்கு நண்பனாக இருக்கும் அதே சமயம் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குவது அவசியம். இந்த கொரோனா காலத்தில் அனைவரும் அரசாங்க வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என்றும் முககவசம் கட்டாயம் அணியவேண்டும் என்றும் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வெளியே சுற்றக்கூடாது எனவும் கூறினார்.
இது தவிர இந்த கொரோனா காலத்தில் சேவை செய்யும் தன்னார்வலர்களை பாராட்டி அனைவரையும் ஊக்கப்படுத்தினார்.


இந்த நிகழ்சியை ஏற்பாடு செய்த டர்னிங் பாயிண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் திரு. மொராஜி தேசாய், அறங்காவலர் வித்யாதரன் மற்றும் குடிசைப்பகுதி மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் திரு.சேகர், மடிப்பாக்கம் சரகம் காவல் உதவி ஆணையர் திரு. சவரிநாதன், எஸ் 10 பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளர்கள் திரு. அழகு, திரு. சாம் வின்சென்ட் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. திருநாவுக்கரசு மற்றும் சமூக ஆர்வலர் கலைமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

                        இணை ஆசிரியர்
                                 ஆ.சூரியா 
                    சுனாமிசுடர் மாத இதழ்.
             அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர். 
                    www.dcbworldrecords.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும், சூப்பர் ஆரட்ஸ் நிறுவனருமான சூப்பர் சின்னப்பா அவர்கள் தர்மம் வெல்லும்  எனும் வார்த்தைகளால் ஓவியம் வரைந்து அசத்தல்.. இன்று  பிறந்தநாள் விழா காணும் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் கட்சியின் தலைவர், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 அடி நீளமும் 10 அடி அகலமும்  கொண்ட பதாகையில் தொடர்ந்து 5 மணி நேரம் தர்மம் வெல்லும் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரின் படத்தினை வரைந்து விரைவில் பூரண நலம் பெற ஓவியக் கலைஞராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.          ஓவியத்தில் இது போன்ற முயற்சி முதன்மையானது. எனவும் இதற்கு முன்பு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்திருந்தாலும் அவற்றில் இது மிகவும் கடினமானதாகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார் இந்த ஓவியம் நிச்சயம் குணப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நாமும் நம்பிக்கையோடு வாழ்த்துவோம்5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும் சூப்பர் ஆரட்ஸ் நிறுவன வருமான சூப்பர் சின்னப்பா அவர்கள்

சதுரங்கத்தில் சாதனை சுபஸ்ரீ

  சதுரங்கத்தில் சாதனை சாதாரண கிராமத்தில் மண் வாசனையோடு களம் காண தெரியாமல் இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை அடையாளம் காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் . ஆனால்   அமரபூண்டியை சேர்ந்த மாற்றத்திற்கான மாற்றுத்திறனாளி , தன்னம்பிக்கை நாயகன் முருகானந்தம் அவர்கள் அவரது மூத்த மகளான சுபஸ்ரீயை அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் ( சதுரங்கம் )   பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் . திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை   பெற செய்துள்ளார் . ஆம் வாசகர்களே ..... விழிப்புணர்வு போட்டி கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்   ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது . அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது . இதில் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் அரசு உதவி

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் . #DcbTn #DcbTamilCulture #DcbTale