கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 400 பேருக்கு நிவாரண உதவி
– துவங்கி வைத்து தன்னார்வலர்களை உற்சாகப்படுத்திய செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் துணை ஆணையர் திரு. டாக்டர் கே.பிரபாகர்
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரித்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 400 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தனியார் தன்னார்வ அமைப்பான டர்னிங் பாயிண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட் முயற்சியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னை புனித தோமையர் மலை மாவட்ட (செயின்ட் தாமஸ் மவுண்ட்) காவல் துணை ஆணையர் திரு.டாக்டர் கே.பிரபாகர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வைத்து தலைமை ஏற்று துவங்கி வைத்தார்.
மேலும் அவர், சென்னை காவல் துறை என்றுமே பொதுமக்களுக்கு நண்பனாக இருக்கும் அதே சமயம் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குவது அவசியம். இந்த கொரோனா காலத்தில் அனைவரும் அரசாங்க வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என்றும் முககவசம் கட்டாயம் அணியவேண்டும் என்றும் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வெளியே சுற்றக்கூடாது எனவும் கூறினார்.
இது தவிர இந்த கொரோனா காலத்தில் சேவை செய்யும் தன்னார்வலர்களை பாராட்டி அனைவரையும் ஊக்கப்படுத்தினார்.
இந்த நிகழ்சியை ஏற்பாடு செய்த டர்னிங் பாயிண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் திரு. மொராஜி தேசாய், அறங்காவலர் வித்யாதரன் மற்றும் குடிசைப்பகுதி மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் திரு.சேகர், மடிப்பாக்கம் சரகம் காவல் உதவி ஆணையர் திரு. சவரிநாதன், எஸ் 10 பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளர்கள் திரு. அழகு, திரு. சாம் வின்சென்ட் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. திருநாவுக்கரசு மற்றும் சமூக ஆர்வலர் கலைமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள்