மக்கள் மனம் கவர்ந்த, (காவல்) துரை.
கள்ளக்குறிச்சி மாவட்டம்- உளுந்தூர்பேட்டையில், மனநலம் பாதிக்கப்பட்டு வீதியில் ஒருவர் சுற்றி திரிந்தார்.
அவர் தலையில் அதிக முடியுடனும், முகத்தில் அதிக தாடியுடனும் இருந்தார்.
இதைப்பார்த்த எடக்கல் காவல் நிலைய தலைமை காவலர் எங்கள் துரை அவர்கள், அவரது கையாலேயே அந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை சிகை அலங்காரம் மற்றும் முக சவரம் செய்து, குளிக்க வைத்து புதிய உடை உடுத்தி விட்டார்.
இவர் பலமுறை பலருக்கும் நிறைய உதவிகள் செய்துவருவது, அனைவரும் அறிந்ததே.
உலகமே கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், எங்கள் துரை அவர்கள் செய்த இந்த செயலை, பொதுமக்கள் பலரும் பாராட்டினார்கள்.
காவல்துறையினர் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், இவரைப் போன்று ஏராளமான காவல்துறையினர் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்டம்- உளுந்தூர்பேட்டையில், மனநலம் பாதிக்கப்பட்டு வீதியில் ஒருவர் சுற்றி திரிந்தார்.
அவர் தலையில் அதிக முடியுடனும், முகத்தில் அதிக தாடியுடனும் இருந்தார்.
இதைப்பார்த்த எடக்கல் காவல் நிலைய தலைமை காவலர் எங்கள் துரை அவர்கள், அவரது கையாலேயே அந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை சிகை அலங்காரம் மற்றும் முக சவரம் செய்து, குளிக்க வைத்து புதிய உடை உடுத்தி விட்டார்.
இவர் பலமுறை பலருக்கும் நிறைய உதவிகள் செய்துவருவது, அனைவரும் அறிந்ததே.
உலகமே கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், எங்கள் துரை அவர்கள் செய்த இந்த செயலை, பொதுமக்கள் பலரும் பாராட்டினார்கள்.
காவல்துறையினர் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், இவரைப் போன்று ஏராளமான காவல்துறையினர் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இணை ஆசிரியர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
www.dcbworldrecords.com
கருத்துகள்