திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், கணக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் எஸ்பிஐ பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையம் திரு ஜெகதீசன்(கிளை மேலாளர்) அவர்கள் தலைமையில் திறக்கப்பட்டது. ஆலோசகர் திரு வாசுதேவன் அவர்கள் வாடிக்கையாளர் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு மரக்கன்று முக கவசம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் திரு.மகேந்திரன் திமுக பிரதிநிதி மற்றும் எரமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அருட்திரு பெஞ்சமின் பிராங்கிளின் சிஎஸ்ஐ பழனி கிராம குருசேகரம், சமூக ஆர்வலர்கள் வீரமணிகண்டன், காமராஜ், ஆனந்த், லியாஸ்கர், சுனாமி சுடர் இணைய ஆசிரியர் ஆ.சூரியா, உங்களின் முதல் குரல் நிருபர் ஆதிமூலம், ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இணை ஆசிரியர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
www.dcbworldrecords.com
கருத்துகள்