முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரியா விடை கொடுத்த சார் ஆட்சியர்

பழனியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழனி சார் ஆட்சியராக

*27/6/2020 திரு.உமா IAS அவர்கள்* *பதவியேற்று மக்களின் குறைகளை இரவு பகல் பாராமல் தனக்கே உரிய பாணியில் அனைத்து குறைகளையும் குற்றங்களையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும் அழைத்து கூப்பிட்ட குரலுக்கு எந்த பகுதி என்று பாராமல் ஓடோடி வந்து மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு சார்பில் வாரி வாரி வழங்கினார்.பழனி நகரை தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும் என்று அனைத்து அரசு அதிகாரிகளையும் தனது சாட்டையை சுழற்றி வேலைகளை செய்ய வைத்து தூய்மையான நகரமாக மாற்றினார். கொரோனோ என்ற வார்த்தை துவங்கிய காலத்திலிருந்து தற்போது வரை நேரம் பார்க்காமல் உணவு பார்க்காமல் உறவுகள் பார்க்காமல் உயிர் பயம் பார்க்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் நொடிப்பொழுதில்  சம்பவ இடத்திற்க்கு சென்று தகுந்த பாதுகாப்புகளை ஏற்படுத்தி மக்கள் நலனை தன் மூச்சாக நினைத்து இன்று வரை மிகப்பெரிய சேவையை மக்களுக்கு வாரி வழங்கி வந்த நிலையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார் என்ற செய்தி மிகவும் வருத்தமாக இருந்தாலும் ஆற்றுநீர் ஒரு இடத்தில் தங்குவதில்லை தொடர்ந்து அனைத்து மக்களுக்கும் தங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று நினைத்து எங்களை நாங்களே சமாதானப் படுத்திக் கொள்கிறோம். பழனி நகரில் ஒரு சிறந்த சார் ஆட்சியர் ஆகவும் பெண்ணினத்தின் பெருமை காத்த போராளியாகவும் மக்கள் தங்கள் குறைகளை நீக்கும் தாயுள்ளம் கொண்ட தாயாகவும் விளங்கிய எங்கள் ஆட்சியரே!!!!*
என்றும் உங்கள் வெற்றிக்கு எங்களின் கால்தடம் பின்னோக்கி வரும் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறோம்...

                          இணை ஆசிரியர்
                                 ஆ.சூரியா 
                    சுனாமிசுடர் மாத இதழ்.
             அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர். 
                    www.dcbworldrecords.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும், சூப்பர் ஆரட்ஸ் நிறுவனருமான சூப்பர் சின்னப்பா அவர்கள் தர்மம் வெல்லும்  எனும் வார்த்தைகளால் ஓவியம் வரைந்து அசத்தல்.. இன்று  பிறந்தநாள் விழா காணும் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் கட்சியின் தலைவர், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 அடி நீளமும் 10 அடி அகலமும்  கொண்ட பதாகையில் தொடர்ந்து 5 மணி நேரம் தர்மம் வெல்லும் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரின் படத்தினை வரைந்து விரைவில் பூரண நலம் பெற ஓவியக் கலைஞராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.          ஓவியத்தில் இது போன்ற முயற்சி முதன்மையானது. எனவும் இதற்கு முன்பு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்திருந்தாலும் அவற்றில் இது மிகவும் கடினமானதாகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார் இந்த ஓவியம் நிச்சயம் குணப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நாமும் நம்பிக்கையோடு வாழ்த்துவோம்5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும் சூப்பர் ஆரட்ஸ் நிறுவன வருமான சூப்பர் சின்னப்பா அவர்கள்

சதுரங்கத்தில் சாதனை சுபஸ்ரீ

  சதுரங்கத்தில் சாதனை சாதாரண கிராமத்தில் மண் வாசனையோடு களம் காண தெரியாமல் இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை அடையாளம் காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் . ஆனால்   அமரபூண்டியை சேர்ந்த மாற்றத்திற்கான மாற்றுத்திறனாளி , தன்னம்பிக்கை நாயகன் முருகானந்தம் அவர்கள் அவரது மூத்த மகளான சுபஸ்ரீயை அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் ( சதுரங்கம் )   பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் . திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை   பெற செய்துள்ளார் . ஆம் வாசகர்களே ..... விழிப்புணர்வு போட்டி கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்   ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது . அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது . இதில் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் அரசு உதவி

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் . #DcbTn #DcbTamilCulture #DcbTale