பழனியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழனி சார் ஆட்சியராக
*27/6/2020 திரு.உமா IAS அவர்கள்* *பதவியேற்று மக்களின் குறைகளை இரவு பகல் பாராமல் தனக்கே உரிய பாணியில் அனைத்து குறைகளையும் குற்றங்களையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும் அழைத்து கூப்பிட்ட குரலுக்கு எந்த பகுதி என்று பாராமல் ஓடோடி வந்து மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு சார்பில் வாரி வாரி வழங்கினார்.பழனி நகரை தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும் என்று அனைத்து அரசு அதிகாரிகளையும் தனது சாட்டையை சுழற்றி வேலைகளை செய்ய வைத்து தூய்மையான நகரமாக மாற்றினார். கொரோனோ என்ற வார்த்தை துவங்கிய காலத்திலிருந்து தற்போது வரை நேரம் பார்க்காமல் உணவு பார்க்காமல் உறவுகள் பார்க்காமல் உயிர் பயம் பார்க்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் நொடிப்பொழுதில் சம்பவ இடத்திற்க்கு சென்று தகுந்த பாதுகாப்புகளை ஏற்படுத்தி மக்கள் நலனை தன் மூச்சாக நினைத்து இன்று வரை மிகப்பெரிய சேவையை மக்களுக்கு வாரி வழங்கி வந்த நிலையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார் என்ற செய்தி மிகவும் வருத்தமாக இருந்தாலும் ஆற்றுநீர் ஒரு இடத்தில் தங்குவதில்லை தொடர்ந்து அனைத்து மக்களுக்கும் தங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று நினைத்து எங்களை நாங்களே சமாதானப் படுத்திக் கொள்கிறோம். பழனி நகரில் ஒரு சிறந்த சார் ஆட்சியர் ஆகவும் பெண்ணினத்தின் பெருமை காத்த போராளியாகவும் மக்கள் தங்கள் குறைகளை நீக்கும் தாயுள்ளம் கொண்ட தாயாகவும் விளங்கிய எங்கள் ஆட்சியரே!!!!*
என்றும் உங்கள் வெற்றிக்கு எங்களின் கால்தடம் பின்னோக்கி வரும் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறோம்...
இணை ஆசிரியர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
www.dcbworldrecords.com
கருத்துகள்