கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் பொருளாதாரமின்றி தவித்த மக்களுக்கு நாம் அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கி வந்தோம். அந்த சமயத்தில் நாம் சந்தித்த ஓர் சேவை மனமுள்ள அற்புதமான மனிதர் தக்காளி மொத்த வியாபாரி மகேஸ்வரன், மக்குளுக்கு தேவையான அத்தியாவசிய பொருளான தக்காளி மற்றும் வெங்காயத்தை மொத்தமாக வாங்குவதர்க்காக கோயம்பேடு மார்க்கெட் சென்றோம். மொத்தமாக விற்பனை செய்யும் வியாபாரியாக சந்தித்தோம் அவரிடம் பேசினோம் நாம் செய்யும் ஔசேவைகளை விளக்கினோம். அப்பொழுது அவர் கூறியது எனக்கும் நிறைய செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது ஆனால் பொருளாதாரம் நம்மையும் துன்பத்திற்கு ஆளாக்குகிறது என்று கூறினார். நிறைய பேசினோம் வியாபாரத்தின் இடையே, முதல் வியாபாரம் முடிந்து பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கு காய்கறிகள் வாங்கி அதை நாம் சேவையாக செய்ததை வீடியோ மற்றும் புகைபடமாக அனுப்பினேன். அதை பார்த்த அவர் அன்று முதல் நாம் அவரிடம் வாங்கும் எடுக்கும் விலைக்கே பொருட்களை கொடுத்து உதவினார். அதுமட்டுமல்லாது இன்று வரை அவரிடம் கடனே பல ஆயிரங்கள் உள்ளது. அதை எல்லாம் அவர் பொருட்டப்படுத்தாமல் கேட்கும் போதெல்லாம் காய்கறிகளை அனுப்பி வைப்பார். எப்படியும் உதவலாம் இப்படியும் உதவலாம் நம் சக்திக்கு ஏற்றார் போல.சிறந்து விளங்கும் இவரது செயல் பாராட்டுக்குரியது.
சுனாமி சுடர் ஆலோசகர்
தமிழ்
இணை ஆசிரியர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
www.dcbworldrecords.com
கருத்துகள்