*ஒரு மணி நேரத்தில் இரண்டு விபத்துக்கள்*
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், ஆயக்குடி முதல் கள்ளிமந்தயம் வரை தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பள்ளிக்கூடத்தின் வலசு பிரிவு அருகே 8 45 pm மணி அளவில் ஒரு விபத்து 9.30 pm மணி அளவில் ஒரு விபத்து. பள்ளிக்கூடத்தின் வலசு பிரிவு அருகே கடந்த வாரம் அவர்கள் போட்ட தார் சாலையில் கூட்டு குடிநீர் குழாய் உடைந்துள்ளது அதை சரி செய்வதற்காக இரண்டு பக்கங்களில் செம்மண் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.அதற்கு எந்த ஒரு முன்னெச்சரிக்கை பலகை எதுவுமே இருக்காது. இப்படி எதிர்பாராதவிதமாக நடந்ததுதான் இந்த விபத்து எனவே தார்சாலை பணியில் வேலை செய்யும் மேற்பார்வையாளர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள்