பெண்ணின் அறுவை சிகிச்சைக்கு உரிய நேரத்தில் உதிரம் கிடைக்க ஏற்பாடு செய்த கொடைக்கானல் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார்
17.06.2022 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேம்படியூத்து ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்த வசந்தா(40) என்பவரை கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் வசந்தா அவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு உதிரம் தேவைப்படுவதை அறிந்த நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பித்தளைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை அணுகியபோது அவர் உதிரம் கொடுக்க முன்வந்தார். இதனையடுத்து அப்பெண்ணிற்கு உதிரம் கொடுத்து உதவி செய்தார்
கருத்துகள்