covid-19 தடுப்பூசிகளை கொண்டு கிறிஸ்துமஸ் விழிப்புணர்வு குடில் அமைத்து சுந்தரராசு உலக சாதனை படைத்தார்
புதுச்சேரி அரியாங்குப்பம் உப்புக்கார வீதியில் வசிக்கும் சுந்தரராசு என்பவர் தனது வீட்டில் கோவிட் தடுப்பூசி மாதிரி ஊசி மற்றும் பாட்டில்களைக் கொண்டு குடில் அமைத்து 100% கோவிட் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
இந்து மதத்தைப் பின்பற்றி வரும் புதுச்சேரி நோணாங்குப்பம் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் நுண்கலை ஆசிரியர் சுந்தரராசு ஒவ்வொரு ஆண்டும் குடில் அமைத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதற்கு முன்பு 1 கன செ.மீ கிறிஸ்துமஸ் குடில் செய்து அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். அதைத் தொடர்ந்து காய்கறிகளால் குடில், குடிதண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களால் வடிவமைத்து குடில், தேங்காய்களை கொண்டு வடிவமைத்து குடில், தானியங்களை கொண்டு வடிவமைத்து குடில், 700 புத்தகங்களை கொண்டு வடிவமைத்து குடில்,என வித்தியாசமாக ஆண்டுதோறும் செய்து வருவது வழக்கம். கடந்த ஆண்டு 1000 துணிப்பைகளை கொண்டு குடில் மற்றும் பல்வேறு வகையான திண்பண்டங்களை கொண்டு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் குடில் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்பதாவது ஆண்டாக
இதனைத் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது வீட்டில் வித்தியாசமான முறையில் கோவிட்19 தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை மையமாகக் கொண்டு நான்கு அடி உயரமான அளவில் மருந்து செலுத்தும் ஊசியையும், இரண்டு அடி பெரிய அளவில் மாதிரி கோவிட் மருந்து பாட்டில் உருவாக்கி அந்த கோவிட் 19 மருந்து பாட்டிலில் உட்பகுதியில் மாட்டுத்தொழுவத்தில் குழந்தை இயேசு பிறப்பது போல் மற்றும் நட்சத்திரங்கள் ஒளிப்பது போல அதில் மாதா,சூசையப்பர்,ஆடு மாடு,கழுதை, ஒட்டகம் போன்றவை உள்ளது போல் குடில் வடிவமைத்துள்ளார். மேலும் கிருஸ்துமஸ் மரம் மற்றும் நிலப்பகுதிகளுக்கு மருந்து ஊசியை கொண்டு வழிப்பாதை செல்வதுபோல் அதில் ராஜாக்கள் பரிசுப் பொருள்கள் எடுத்துக் கொண்டு வருவது போல் பல்வேறு வகையான மின் வண்ண விளக்குகளை கொண்டு குடில் அமைக்கப்பட்டுள்ளது.
covid-19 தடுப்பூசி விழிப்புணர்வு
இதில் கிறிஸ்துமஸ் தாத்தா டாக்டர் (மருத்துவர்)போல் உடை அணிந்து கொண்டு முகக் கவசம் போட்டுக் கொண்டு,ஒரு கையில் ஊசி மற்றொரு கையில் கொரானா கோவிட்-19 தடுப்பூசி வைத்துக்கொண்டு மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவது போல் தத்துரூபமாக செய்துள்ளார். மேலும் குடில் பின் பகுதியில் விழிப்புணர்வு வாசகம் புதுச்சேரியில் 100 சதவீதம் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தி கொரானா இல்லாத உலகம் படைப்போம் என கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் எந்தவிதமான தொற்று நோய் வராமல் அனைவரும் கட்டாயம் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்த கிறிஸ்மஸ் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்து வருகிறார்.
இந்த ஊசி மாதிரி கோவிட் மருந்து பாட்டில் செய்யப்பட்ட covid-19 தடுப்பூசி விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் குடிலை இந்து,முஸ்லிம் கிறிஸ்துவர் என அனைத்து மதத்தை சார்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து மகிழ்ந்து சுந்தரராசு குடும்பத்தினரை பாராட்டி வருகின்றனர் நாமும் பாராட்டுவோம் 9843651955...
#DailyNews #sunamisudarmonthlymagazine
#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya
#dcbworldrecords #adjudicatorteam #adjudicator #dcbnews
#Newtalents #dcbCreativity #dcbindia #dcbtalents
#dcbadjudicator #dcbnews #dcbrecords #Creator #explore
#dcbinternationalrecordswrrf
#editorsuriya #adjudicatorsuriya
கருத்துகள்