கோவை அரசு பள்ளி சகோதரர்கள் ஸ்கேட்டிங் மூலம் அசத்தல்
ஒவ்வொருநாளும் நம் எதாவது ஒன்றை கற்றுக்கொள்கிறோம். இயற்கைக்கு நாமும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என பலரும் முயற்சித்து வருகின்றனர்.அந்த வகையில் இன்று கோவையைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களைப்பற்றி பார்ப்போம் ....
ஸ்கேட்டிங் மூலம் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை கொண்டு சேர்க்க மூன்று நாள் ஸ்கேட்டிங் மூலம் கையில் தேசியக்கொடியை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். பேரூர்,மாதம்பட்டி,வாளையார் ,மதுக்கரை,போன்ற பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு கொடுத்துள்ளனர்.
மீண்டும் மஞ்சப்பை திட்டம்
நெகிழி பைகளானது எளிதில் மக்கும் தன்மை அற்றவை. ஒரு பிளாஸ்டிக் பையானது மக்குவதற்கு பல (100-1000 )ஆண்டுகளாகும். மண்ணின் திறன் அமைப்பிற்கும் மற்றும் மண் சத்துக்களுக்கும் நெகிழி பையானது கெடுதல் மற்றும் சூழ்நிலைகளையும் மாசுப்படுத்துகின்றன.நெகிழி பையானது நம்முடைய புவி சூழலை அழிக்கும் பொருட்களில் ஒன்றானது.
நெகிழி பொருட்களுக்கு தமிழக அரசு தடை
மக்கள் பண்டைய காலங்களில் வாழை இலையில் சாப்பிடுவதும், துணி தாம்பூல பைகள் தருவதும் வழக்கமாக கொண்டிருந்தார்கள். சில்வர், பித்தளை போன்றவைகளில் தண்ணீர் சேமித்தல், நீர் அருந்துதல், போன்ற முறைகளில் இருந்தவர்கள் தற்போது பிளாஸ்டிக் மோகத்தில் இயற்கை வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் இலைகள், பிளாஸ்டிக் கரண்டிகள்,பிளாஸ்டிக் டம்ளர்கள், போன்ற எண்ணற்ற வடிவில் செயற்கையை நாடிச் செல்கின்றனர்.இதனை கருத்தில் கொண்டு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் நெகிழி பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது, பிளாஸ்டிக் பைகளின் பயன் பாட்டை தடுக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கப்பட்டது.
அரசுப்பள்ளி மாணவர்கள்
இந்நிலையில் கோவை மாதம்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் முரளித மற்றும் அதே பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வரும் அவரின் சகோதரர் கவித்தரன் ஆகியோர் ஸ்கேட்டிங் மூலம் மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வை கடந்த 3 நாட்களாக மேற்கொண்டனர்.அவர்களின் முயற்சியும்,பயிற்சியும்
எனது தந்தை ரகுபதி, தாய் கலைச்செல்வி, அப்பா ஸ்கேட்டிங் பயிற்சி அளித்து வருகிறார்.இதனால், நாங்கள் இருவரும் சிறு வயது முதல் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வருகிறோம். இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கடந்த 2020-ல் குடியரசு தினத்தன்று நாக்பூரில் தொடர்ந்து ஆறு மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளோம் . இது இன்டர்நேஷனல் புக் ஆப் ரெகார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ள்ளது.மேலும், கோவைப்புதூரில் ஸ்கேட்டிங் செய்தபடி, 3 மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றினோம். கொரோனா விழிப்புணர்வுக்காக ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை 38 கிலோ மீட்டர் ஸ்கேட்டிங் செய்து லிங்கன் புக் ஆப் ரெக்கார்டில் பதிவு செய்தோம்.மேலும், கோவை மாதம்பட்டி இருந்து தீத்திப்பாளையம் வரை போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்கேட்டிங் மூலம் பொதுமக்க விடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.
மூன்றுநாள் பயணம்
முதல் நாள் மாதம்பட்டி முதல் பேரூர் வரையும், இரண்டாவதுநாள் வாளையார் முதல் மதுக்கரை வரையும் மூன்றாவது நாள் ஈஷாயோகா மையம் முதல் மாதம்பட்டி வரை என மொத்தம்41கிலோமீட்டர்பயணம்செய்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் ,காவல்துறை அதிகாரிகள்,ஆசிரியபெருமக்கள் ,பொதுமக்கள் அனைவரும் வாழ்த்தி சென்றுள்ளனர் ..நீங்களும் வாழ்த்துங்கள் தொடர்ந்து விழிப்புணர்வு அளிப்போம்..நெகிழி ஒழிப்போம்,இயற்கையை காப்போம்.
#DailyNews #sunamisudarmonthlymagazine
#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya
#dcbworldrecords #adjudicatorteam #adjudicator #dcbnews
#Newtalents #dcbCreativity #dcbindia #dcbtalents
#dcbadjudicator #dcbnews #dcbrecords #Creator #explore
#dcbinternationalrecordswrrf
#editorsuriya #adjudicatorsuriya
கருத்துகள்