முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவை அரசு பள்ளி சகோதரர்கள் ஸ்கேட்டிங் மூலம் அசத்தல்


 கோவை அரசு பள்ளி சகோதரர்கள் ஸ்கேட்டிங் மூலம்  அசத்தல்

ஒவ்வொருநாளும் நம் எதாவது ஒன்றை கற்றுக்கொள்கிறோம். இயற்கைக்கு நாமும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என பலரும் முயற்சித்து வருகின்றனர்.அந்த வகையில் இன்று கோவையைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களைப்பற்றி பார்ப்போம் ....


ஸ்கேட்டிங் மூலம் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை கொண்டு சேர்க்க மூன்று நாள் ஸ்கேட்டிங் மூலம் கையில் தேசியக்கொடியை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். பேரூர்,மாதம்பட்டி,வாளையார் ,மதுக்கரை,போன்ற பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு கொடுத்துள்ளனர்.


மீண்டும் மஞ்சப்பை திட்டம்


நெகிழி பைகளானது எளிதில் மக்கும் தன்மை அற்றவை. ஒரு பிளாஸ்டிக் பையானது மக்குவதற்கு பல (100-1000 )ஆண்டுகளாகும். மண்ணின் திறன் அமைப்பிற்கும் மற்றும் மண் சத்துக்களுக்கும் நெகிழி பையானது கெடுதல் மற்றும் சூழ்நிலைகளையும் மாசுப்படுத்துகின்றன.நெகிழி பையானது நம்முடைய புவி சூழலை அழிக்கும் பொருட்களில் ஒன்றானது.

நெகிழி பொருட்களுக்கு தமிழக அரசு தடை

மக்கள் பண்டைய காலங்களில் வாழை இலையில் சாப்பிடுவதும், துணி தாம்பூல பைகள் தருவதும் வழக்கமாக கொண்டிருந்தார்கள். சில்வர், பித்தளை போன்றவைகளில் தண்ணீர் சேமித்தல், நீர் அருந்துதல், போன்ற முறைகளில் இருந்தவர்கள் தற்போது பிளாஸ்டிக் மோகத்தில் இயற்கை வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் இலைகள், பிளாஸ்டிக் கரண்டிகள்,பிளாஸ்டிக் டம்ளர்கள், போன்ற எண்ணற்ற வடிவில் செயற்கையை நாடிச் செல்கின்றனர்.இதனை கருத்தில் கொண்டு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் நெகிழி பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது, பிளாஸ்டிக் பைகளின் பயன் பாட்டை தடுக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கப்பட்டது.

 அரசுப்பள்ளி மாணவர்ள்

இந்நிலையில் கோவை மாதம்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் முரளித மற்றும் அதே பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வரும் அவரின் சகோதரர் கவித்தரன் ஆகியோர் ஸ்கேட்டிங் மூலம் மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வை கடந்த 3 நாட்களாக மேற்கொண்டனர்.

அவர்களின் முயற்சியும்,பயிற்சியும்

எனது தந்தை ரகுபதி, தாய் கலைச்செல்வி, அப்பா ஸ்கேட்டிங் பயிற்சி அளித்து வருகிறார்.இதனால், நாங்கள் இருவரும் சிறு வயது முதல் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வருகிறோம். இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கடந்த 2020-ல் குடியரசு தினத்தன்று நாக்பூரில் தொடர்ந்து ஆறு மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளோம் . இது இன்டர்நேஷனல் புக் ஆப் ரெகார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ள்ளது.மேலும், கோவைப்புதூரில் ஸ்கேட்டிங் செய்தபடி, 3 மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றினோம். கொரோனா விழிப்புணர்வுக்காக ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை 38 கிலோ மீட்டர் ஸ்கேட்டிங் செய்து லிங்கன் புக் ஆப் ரெக்கார்டில் பதிவு செய்தோம்.மேலும், கோவை மாதம்பட்டி இருந்து தீத்திப்பாளையம் வரை போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்கேட்டிங் மூலம் பொதுமக்க விடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.

 மூன்றுநாள் பயணம் 

முதல் நாள் மாதம்பட்டி முதல் பேரூர் வரையும், இரண்டாவதுநாள் வாளையார் முதல் மதுக்கரை வரையும் மூன்றாவது நாள் ஈஷாயோகா மையம் முதல் மாதம்பட்டி வரை என மொத்தம்41கிலோமீட்டர்பயணம்செய்து 
விழிப்புணர்வை  ஏற்படுத்தியுள்ளோம். 
 
பிளாஸ்டிக் மூலம் சுற்றுச்சூழல் மாசு உள்பட பல்வேறு பிரசனைகள் ஏற்படுகிறது.. எனவே, பசுமைக்கு எதிரியாக உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கும், மக்கள் மத்தியில் இயற்கைக்கு உகந்த மஞ்சள் பை போன்ற துணி பைகனை பயன்படுத்திடவே இந்த ஸ்கேட்டிங் பயணத்தில் ஈடுபட்டோம்."


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் ,காவல்துறை அதிகாரிகள்,ஆசிரியபெருமக்கள் ,பொதுமக்கள் அனைவரும் வாழ்த்தி சென்றுள்ளனர் ..நீங்களும் வாழ்த்துங்கள் தொடர்ந்து விழிப்புணர்வு அளிப்போம்..நெகிழி ஒழிப்போம்,இயற்கையை காப்போம்.

#DailyNews  #sunamisudarmonthlymagazine

#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya

#dcbworldrecords  #adjudicatorteam  #adjudicator  #dcbnews

#Newtalents #dcbCreativity  #dcbindia  #dcbtalents

 #dcbadjudicator  #dcbnews  #dcbrecords  #Creator  #explore

#dcbinternationalrecordswrrf  #editorsuriya  #adjudicatorsuriya

#dcbworldrecords #dcbwrrf  

சுனாமி சுடர் மாத இதழ்  இணை ஆசிரியர்   மதிப்புறு முனைவர் .சூரியா TTC.,R.J.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும், சூப்பர் ஆரட்ஸ் நிறுவனருமான சூப்பர் சின்னப்பா அவர்கள் தர்மம் வெல்லும்  எனும் வார்த்தைகளால் ஓவியம் வரைந்து அசத்தல்.. இன்று  பிறந்தநாள் விழா காணும் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் கட்சியின் தலைவர், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 அடி நீளமும் 10 அடி அகலமும்  கொண்ட பதாகையில் தொடர்ந்து 5 மணி நேரம் தர்மம் வெல்லும் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரின் படத்தினை வரைந்து விரைவில் பூரண நலம் பெற ஓவியக் கலைஞராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.          ஓவியத்தில் இது போன்ற முயற்சி முதன்மையானது. எனவும் இதற்கு முன்பு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்திருந்தாலும் அவற்றில் இது மிகவும் கடினமானதாகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார் இந்த ஓவியம் நிச்சயம் குணப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நாமும் நம்பிக்கையோடு வாழ்த்துவோம்5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும் சூப்பர் ஆரட்ஸ் நிறுவன வருமான சூப்பர் சின்னப்பா அவர்கள்

சதுரங்கத்தில் சாதனை சுபஸ்ரீ

  சதுரங்கத்தில் சாதனை சாதாரண கிராமத்தில் மண் வாசனையோடு களம் காண தெரியாமல் இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை அடையாளம் காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் . ஆனால்   அமரபூண்டியை சேர்ந்த மாற்றத்திற்கான மாற்றுத்திறனாளி , தன்னம்பிக்கை நாயகன் முருகானந்தம் அவர்கள் அவரது மூத்த மகளான சுபஸ்ரீயை அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் ( சதுரங்கம் )   பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் . திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை   பெற செய்துள்ளார் . ஆம் வாசகர்களே ..... விழிப்புணர்வு போட்டி கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்   ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது . அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது . இதில் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் அரசு உதவி

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் . #DcbTn #DcbTamilCulture #DcbTale