1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்ட கலைத்திருவிழா-2022
பழனி என்றாலே பஞ்சாமிர்தம் தான் நினைவுக்கு வரும் அதை மலை வாழைப்பழம், பேரிச்சம்பழம், கரும்பு சர்க்கரை, குங்குமப்பூ, நெய், கல்கண்டு, பச்சை கற்பூரம் போன்ற கலவைகளை கொண்டு சேர்க்கப்படும் அற்புதமான சுவை கொண்ட பஞ்சாமிர்தமே பழனியின் தனித்துவம்.அதை போல தான் கல்வி,தொழில் ,கலை,ஆன்மிகம் போன்ற கலை சூழ்ந்த கலவைகளை கொண்ட பழனியில் பல தனித்திறமைகளில் தடம் பதிக்க தகுந்த வாய்ப்பும் தளங்களும் கிடைவில்லை என்பதை அறிந்து இந்த கலைத்திருவிழா 2022 நிகழ்வு நடை பெற்றது.கலைத்திருவிழா 2022
கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி பழநி லயன்ஸ் க்ளப், பழநி முருகன் ஈவண்ட் மேனேஜ்மெண்ட், பழநி சித்தனாதன் குழுமம் இணைந்து நடத்திய கலைதிருவிழா 2022 என்ற பழநி பள்ளிகள் அளவிலான 11 திறன் போட்டிகள் அங்காள ஈஸ்வரி திருமண மண்டபத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. பழநியில் இவ்வளவு பிரமாண்டமான திறமைக்கான போட்டிகள் நடைபெற்றது இதுவே முதல் முறை என கலைத்திருவிழா நிர்வாக தரப்பில் கூறியுள்ளனர்.1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்
இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி , தனியார் பள்ளி , தனியார் உதவி பெறும் பள்ளிகளிலிருந்து 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் தனித்திறமையை வெளிப்படுத்த கலந்து கொண்டனர். சரியாக காலை 8.30 மணிக்கு மாணவ மாணவிகளின் அணிவகுப்புடன் துவங்கிய நிகழ்ச்சி சுமார் பத்து மணி நேரம் இசை,நடனம் ,பேச்சுப்போட்டி,கையெழுத்து போட்டி,ஓவியம்,ஹை கூ கவிதை,ஆடை அலங்கார அணிவகுப்பு,கழிவுகளிலிருந்து கலை,பூக்கோலம் ,மௌன நாடகம் ,குறும்பட போட்டி ,என 11 போட்டிகளில் தனிநபர் குழு என 25 பிரிவுகளில் நடைபெற்றது . இந்த போட்டிகள் அனைத்தும் விறு விறுப்பாகவும், சுவாரசியமாகவும் நடை பெற்றது, மாலை 6 மணிக்கு பரிசளிப்புடன் நிறைவு பெற்றது.
இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் , வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களுடன், வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.
பரிசை தட்டி சென்ற பள்ளிகள்
கலந்து கொண்ட அனைத்து போட்டிகளிலும் பெரும்பான்மையான வெற்றிகளை பெற்று ஒட்டுமொத்த வெற்றியாளருக்கான முதல் பரிசு சங்கர் பொன்னர் மேல் நிலைபள்ளியும், இரண்டாம் பரிசு அருள்மிகு பழனியாண்டவர் மெட்ரிக் மேல் நிலைபள்ளியும், மூன்றாம் பரிசு நெய்காரபட்டி கிரசண்ட் மெட்ரிக் மேல் நிலைபள்ளியும், பாரத் பப்ளிக் பள்ளியும் பகிர்ந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்கள்
இதில் சிறப்பு விருந்தினர்களாக சித்தனாதன் N.விஜய குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பழநி மக்கள் ஆதீனம் சீர்வளர்சீர் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், நெய்காரபட்டி PRG வேலப்பநாயுடு பள்ளி செயலாளர் கிரிநாத் இராமச்சந்திரன், சித்தமருத்துவர் மகேந்திரன், P.P.N.மருத்துவமனை டாக்டர்.விமல் குமார்,ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் செந்தாமரை செல்வி மருத்துவர், ஸ்ரீ பழநி ஆண்டவர் ஸ்டீல்ஸ் உரிமையாளர்,பழநி MI மொபைல்ஸ் & ஆரஞ்சு மொபைல்ஸ் உரிமையாளர் பாலமுரளி கிருஷ்ணா,கவுரா எலக்ட்ரிக் பைக் உரிமையாளர், தாமரை எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர், ஸ்ரீ தெய்வீக விலாஸ் ஸ்பெசல் பஞ்சாமிர்தம் உரிமையாளர் v. தர்மலிங்கம்,விவேகானந்தா மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் காசி விஸ்வநாதன், பழநி ஸ்ரீ மயூரா டிஜிட்டல் கலர் லேப் உரிமையாளர் மற்றும் பழனி அரிமா சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர் அனைத்துதுறை சார்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர் .ஒருங்கிணைப்பு
நிகழ்ச்சியை கீஸ் ஆஃப் மியூசிக் இசை பயிற்சி பள்ளி,V Talk ஆங்கில அகாடமி, லில்லி புட்ஸ் மழலையர் பள்ளி, சூப்பர் ஆர்ட்ஸ் ஓவிய பள்ளி, K பிலிம்ஸ் ஸ்டுடியோ, பீனிக்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்,சேவகன் சிலம்பாட்டஅறக்கட்டளை, SSS நடன பள்ளி, சத்தியம் IPS அறக்கட்டளை ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்.
இது குறித்து பேசிய பழநி முருகன் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் DR.பொன் கவியரசு கூறுகையில்:
சென்னை கோவை மதுரை போன்ற பெரு ந கரங்களோடு ஒப்பிடும் போது நமது மாணவ மாணவிகளுக்கு சரிவர வாய்ப்பு கிடைப்பது இல்லை எனவும் அவர்களுக்கு முறையான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கவும்,அவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கட்டவும் இந்த கலைத்திருவிழா தொடங்கியதாவும் ,இனி ஆண்டுதோறும் நிகழ்ச்சி நடத்ததுவதாகவும்,இந்த கலைத்திருவிழாவிற்கு ஒத்துழைப்பு அளித்த நண்பர்களுக்கும்,நிகழ்ச்சிக்கு வழங்கிய உபயதாரர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் ,ஆசிரியபெருமக்களுக்கும் ,ஊடக உறவுகளுக்கும் ,பள்ளி மற்றும் கலை நிறுவனங்களுக்கும் நன்றிகூறியுள்ளார்.
இதில் கலந்து கொண்டவர்கள் இந்த நிகழ்வானது மிக பிரமாண்டமாகவும்,நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் பார்க்கும் போது இப்படி ஒரு வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்திருந்தால் ஆசைபட்டத்துறையில் நாங்களும் கால்பதித்திருப்போம்.இருந்த போதிலும் நாங்களும் முழு ஒத்துழைப்போடு இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என பார்க்க முடிந்தது.ஆம் நண்பர்களே உறவுகளே வாய்ப்புக்காக நாமும் முயற்சித்து கொண்டே இருப்போம் இதுபோன்ற வாய்ப்புகளில் திறமையை வெளிப்படுத்துவோம்.
ஆசிரியர் மதிப்புறு முனைவர் ஆ .சூரியா TTC.,R.J.,JMC.,
9 44 2 33 80 99
கருத்துகள்