புத்தகம் உங்கள் நண்பன்
இன்று தலை குனிந்து என்னை படித்தால் நாளை தலை நிமிர்ந்து வாழ வைப்பேன்- புத்தகம்.
இந்த வாசகத்தை நாம் அனைவரும் அறிந்து இருப்போம். பொது அறிவு,வரலாறு, தொழில்நுட்பம், கலை, மொழி, புராணம் என அனைத்து வகையான தகவல்களையும் புத்தகங்கள் வழியாக தெரிந்து கொள்ள, வாழ்வை நல்வழியில் கொண்டு செல்வதற்கு புத்தகம் ஒரு சிறந்த நண்பனாக திகழ்கிறது. எனவே, இன்றைய தலைமுறையினரிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை நாம் சிறுவயதில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். இதனால் அறிவு விருத்தி அடையும். நமக்கு தேவையான, பயனுள்ள புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டியது முக்கியம். ‘இன்றைய மாணவ செல்வங்கள் நாளைய தலைவர்கள்’ என்று கூறுவார்கள். அன்றைய தலைவர்கள் அதிகமான புத்தகங்களை வாசிப்பதன் மூலமாக வாழ்வில் உயர்ந்ததை யாராலும் மறுக்க முடியாது. எனவே பாடப்புத்தகங்கள், செல்போன்களை கடந்து புத்தகங்களை வாசிக்க பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் தொடந்து இந்த பணியை நிகழ்த்தி வருகிறது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பழனி.
கவிஞர் சோ. முத்துமாணிக்கம் எழுதிய " முத்தத்தின் பிரம்படி"; மற்றும் கவிஞர் சோ.மோகனா எழுதிய " உலகை மாற்றிய பெண் கணித மேதைகள்" என்ற நூல்கள். பழனியப்பா நாச்சம்மாள் திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் அந்த நூல்களை சமூக ஆர்வலர் பழனி சித்தமருத்துவர் மகேந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்ட தருணம்.
#dcbworldrecords #adjudicatorteam #adjudicator #dcbnews
#Newtalents #dcbCreativity #dcbindia #dcbtalents
#dcbadjudicator #dcbnews #dcbrecords #Creator #explore
#dcbinternationalrecordswrrf #editorsuriya #adjudicatorsuriya
மதிப்புறு முனைவர் ஆ .சூரியா
கருத்துகள்