தங்க மாளிகையில் துவக்க விழா
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம் நவரத்னா தங்க மாளிகை ஆறாம் ஆண்டு துவக்க விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது.
நவரத்னா தங்க மாளிகையில் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மெர்சி பவுண்டேஷன் நிறுவனர்தன்னம்பிக்கை பேச்சாளர் திருமதி. மெர்சி செந்தில்குமார் அவர்கள் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு சான்றிதழும் பரிசு கோப்பையும் வழங்கி கௌரவிக்கப்பட்டு,ஊக்கபடுத்தினாஅபினவ் பிரத்யூஸ்
குட்டி ராமானுஜம் என்று பழனிக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் சாதனையாளர் பழனி அக்ஷயா அகாடமி பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார் இவரது பெற்றோர்கள் இருவருமே கணிதவியல் பட்டதாரி பணியாற்றி வருகின்றனர் அபார திறமைகளோடு வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பிரபல தொலைக்காட்சிகளிலும் இடம்பெற்று இன்று பள்ளி மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று அவருடைய திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார். மேலும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இவர் விரைவில் கின்னஸ் உலக சாதனையும் நிகழ்த்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மூத்த சகோதரர் விபுல் பிரத்யூஷ் ஏழாவது பயின்று வருகிறார் இவரும் விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாதனையாளர்களை கௌரவித்ததற்கு நவரத்தின நிர்வாகத்திற்கும் குடும்பத்திற்கும் நன்றிகளை பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
சுபஸ்ரீ செஸ் (சதுரங்கம்)
கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது. அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது.இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அரசு
உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.சுபஸ்ரீ தொடர்ந்து அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் (சதுரங்கம்) பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை பெற்றுள்ளார் .
மேலும் இந்நிகழ்ச்சியில் வணிக சங்க பேரமைப்பு தலைவர் ஜே பி சரவணன் அவர்களும், கோல்டன் கல்வி நிறுவனர் மற்றும் தொப்பம்பட்டி வணிக பேரவை தலைவர் மாசிலாமணி அவர்களும், வணிக சங்க செயலாளர் கார்த்திகேயன் அவர்களும் வணிக சங்க செய்தி தொடர்பாளர் ஜெகதீசன் அவர்களும் சமூக ஆர்வலர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நவரத்னா குழுமத்தின் சார்பாக ஜம்சீர் அகமத் நன்றியுரையாற்றினார்.நிகழ்ச்சி
#dcbworldrecords #adjudicatorteam #adjudicator #dcbnews
#Newtalents #dcbCreativity #dcbindia #dcbtalents
#dcbadjudicator #dcbnews #dcbrecords #Creator #explore
#dcbinternationalrecordswrrf #editorsuriya #adjudicatorsuriya
மதிப்புறு முனைவர் ஆ .சூரியா
9442338099
கருத்துகள்