முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழைய கணிப்பொறி பொருட்களில் கிறிஸ்மஸ் குடில்..

 பழைய கணிப்பொறி பொருட்களில் கிறிஸ்மஸ் குடில்.. 

அசத்திய புதுச்சேரி உலகசாதனையாளர்! 

புதுச்சேரி, அரியாங்குப்பம், உப்புகார வீதியில் வசிக்கு
ம்  சுந்தரராசு அவர்கள்  அரசுப்  பள்ளி நுண்கலை ஆசிரியர். இவர் ஆண்டுதோறும் விதவிதமான பொருட்களை கொண்டு தனது வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது வழக்கம்.இந்த வருடம் 10 -வது முறையாக வித்தியாசமான முறையில் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு டிஜிட்டல் இந்தியாவை போற்றும் வகையில் கம்யூட்டர் மற்றும் பழுதடைந்த கழிவு மின்னணு பொருட்களை கொண்டு கிருஸ்துமஸ் குடில் செய்து உள்ளார்.


சூழலுக்கு ஏற்றவாறு குடில்

இந்து மதத்தினை பின்பற்றி வரும் நோணாங்குப்பம் மேல் நிலைப்பள்ளியில் நுண்கலை ஆசிரியர்,  ஒவ்வொரு ஆண்டும் சுற்று சூழலுக்கு ஏற்றவாறு குடில் அமைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

முந்தைய சாதனைகள்

இதற்கு முன்பு  ஒரு கன செ.மீட்டரில் கிறிஸ்துமஸ் குடில் செய்து அசிஸ்ட் உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு 

மூலம் காய்கறிகளான கிருஸ்துமஸ் குடில், பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மறு சூழற்சி விழிப்புணர்வு  மூலம் குடி தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்கலால் வடிவமைத்த கிருஸ்துமஸ் குடில், மரம் வளர்போம் என்ற விழிப்புணர்வு மூலம் தேங்காய்களை கொண்டு வடிவமைத்து கிருஸ்துமஸ்குடில், சிறு தானிய உணவு வகைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மூலம் 25 வகையான தானியங்களை கொண்டு வடிவமைத்த கிருஸ்துமஸ்குடில், மாணவர்கள் கற்றல் திறனை வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மூலம் 700 புத்தகங்களை கொண்டு வடிவமைத்து குடில், அனைவரும் துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மூலம் 1000 துணி பைகளை கொண்டு வடிவமைத்த குடில். தடுப்பூசி போட்டு கெள்ளவேண்டும் என்ற விழிப்புணர்வு மூலம்  மாதிரி கொரோன தடுப்பூசி மருந்து, ஊசிகளை கொண்டு வடிவமைத்து உள்ளார். இது போன்ற விழிப்புணர் செய்ததை பாராட்டி உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம் சார்பில் சுந்தரராசு அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு சிறப்பித்தது.

தொடர்ந்து 10-வது ஆண்டாக...

இதனைத் தொடர்ந்து தற்போது 10-வது ஆண்டாக இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தனது வீட்டில்  10  வது முறையாக வித்தியாசமான முறையில் கம்ப்யூட்டர் மற்றும் பழுதான மின்னணு கழிவு பொருட்களை கொண்டு இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு டிஜிட்டல் இந்தியாவை போற்றும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார்.அதில் கம்யூட்டர் மற்றும் பழைய மானிட்டர் டூம் பகுதியை குடில் தொழுவாகவும், ஹார்டு டிஸ்க்கு, கேமிரா பென்ட்ரைவ், டேப், எல்.சி.டி மானிட்டர், லேப்டாப், இன்டர்நெட் மோடம், ஸ்கேனர் மற்றும் மதர் போர்டுகளை கொண்டு சிட்டி பில்டிங், சி.டி.யை கிறிஸ்துமஸ் மரமாக உருவாக்கியுள்ளார்.

ராணுவ தளமாக

பிரிண்டர் மிஷின் ராணுவ தளமாகவும் உருவாக்கப்பட்டு உள்ளது.மற்ற எல்க்ட்ரானிக் கழிவு பொருட்களை கொண்டு குடிலின் மற்ற பகுதிகள் அழகுபடுத்தப்பட்டு உள்ளது.மேலும் கிறிஸ்துமஸ் தாத்தா இன்றைய தலைமுறைக்கு ஏற்றார் போல் கையில் செல்போனுடன், ஹெட்போனில் பாடல் கேட்பது போல் தத்துரூபமாக செய்துள்ளார்.

பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து 

இந்தியாவில்  அனைத்தும் டிஜிட்டல் மையமாக திகழும் இந்த சூழலில் அவற்றை கவனமுடன் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மூலம் இந்த கிறிஸ்துமஸ் குடில்  அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த குடிலை  இந்து ,முஸ்லீம் ,கிறிஸ்துவர் என அனைத்து மதத்தை சார்ந்த பொதுமக்களும்   ஆர்வமுடன் பார்த்து நுண்கலை ஆசிரியர் சுந்தரராசு அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் பாராட்டி செல்கின்றனர்,நாமும் வாழ்த்துவோம்   9843651955.

இந்த லிங்க்கை அழுத்துங்க வீடியோ பாருங்க 

https://youtu.be/-GHzOaFDGfU

(2807) ஓவிய ஆசிரியர் அசத்தல் - YouTube



#DailyNews  #sunamisudarmonthlymagazine

#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya

#dcbworldrecords  #adjudicatorteam  #adjudicator  #dcbnews

#Newtalents #dcbCreativity  #dcbindia  #dcbtalents

 #dcbadjudicator  #dcbnews  #dcbrecords  #Creator  #explore

#dcbinternationalrecordswrrf  #editorsuriya  #adjudicatorsuriya

#dcbworldrecords #dcbwrrf  

                                ஆசிரியர்   மதிப்புறு முனைவர்.  .சூரியா 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும், சூப்பர் ஆரட்ஸ் நிறுவனருமான சூப்பர் சின்னப்பா அவர்கள் தர்மம் வெல்லும்  எனும் வார்த்தைகளால் ஓவியம் வரைந்து அசத்தல்.. இன்று  பிறந்தநாள் விழா காணும் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் கட்சியின் தலைவர், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 அடி நீளமும் 10 அடி அகலமும்  கொண்ட பதாகையில் தொடர்ந்து 5 மணி நேரம் தர்மம் வெல்லும் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரின் படத்தினை வரைந்து விரைவில் பூரண நலம் பெற ஓவியக் கலைஞராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.          ஓவியத்தில் இது போன்ற முயற்சி முதன்மையானது. எனவும் இதற்கு முன்பு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்திருந்தாலும் அவற்றில் இது மிகவும் கடினமானதாகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார் இந்த ஓவியம் நிச்சயம் குணப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நாமும் நம்பிக்கையோடு வாழ்த்துவோம்5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும் சூப்பர் ஆரட்ஸ் நிறுவன வருமான சூப்பர் சின்னப்பா அவர்கள்

சதுரங்கத்தில் சாதனை சுபஸ்ரீ

  சதுரங்கத்தில் சாதனை சாதாரண கிராமத்தில் மண் வாசனையோடு களம் காண தெரியாமல் இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை அடையாளம் காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் . ஆனால்   அமரபூண்டியை சேர்ந்த மாற்றத்திற்கான மாற்றுத்திறனாளி , தன்னம்பிக்கை நாயகன் முருகானந்தம் அவர்கள் அவரது மூத்த மகளான சுபஸ்ரீயை அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் ( சதுரங்கம் )   பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் . திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை   பெற செய்துள்ளார் . ஆம் வாசகர்களே ..... விழிப்புணர்வு போட்டி கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்   ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது . அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது . இதில் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் அரசு உதவி

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் . #DcbTn #DcbTamilCulture #DcbTale