விவேகானந்தா வித்யாலயாவில்
வித்தியாசமான கலை திருவிழா
பழனி சூப்பர் ஆர்ட்ஸ் அகாடமியும்,பழனி வர்ஷா சித்தா கிளினிக்கும் இணைந்து வழங்கிய ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் பங்கு பெற்ற மாநில அளவிலான ஓவியப்போட்டி மற்றும் ஓவியக்கண்காட்சி, ஒவியங்கள் விற்பனை நிகழ்வு பழனியில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது .
12.11.2022 சரியாக 7.00 மணிக்குள் நுழைவுசீட்டுடன் , வரிசையாக நின்று அமைதியாக பிராத்தனை அறைக்கு சென்றனர்.அங்கு அரைமணி நேர பிராத்தனைக்கு பிறகு உடற்பயிற்சியினை செய்து காண்பித்து போட்டியில் கலந்து கொள்ள வந்தவர்களையும் செய்ய சொல்லி போட்டியினை தொடங்கி அனைவருக்குள்ளும் இருக்கும் தன்னம்பிக்கையினை வளரச்செய்தது.நிகழ்ச்சி தொடக்கம்
நிகழ்ச்சியில் சூப்பர் ஆர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் சின்னப்பாஅவர்கள்
வரவேற்புரை வழங்க, பள்ளியின் தலைமையாசிரியர் திரு. காசி ஆறுமுகம் அவர்கள் முன்னிலை வகிக்க, இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக சித்த மருத்துவர் மகேந்திரன் அவர்கள் பங்கேற்று கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் மஞ்சப்பை மற்றும் ஆரோக்கிய கையேடையும் வழங்கினார். இந்நிகழ்வில் கே.ஜி முதல் கல்லூரி மாணவ, மாணவிகளும்,இல்லத்தரசிகளும், ஓவியவேலை பார்ப்பவர்களும்,கலந்து கொண்டு தனது எண்ணங்களுக்கு உயிர் தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஓவியப்போட்டி காலை 9.00 மணிமுதல் 11.30 மணி வரை நடைபெற்றது.வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 70 மாணவ, மாணவிகளும் ,நமது மாவட்டத்தில் 46 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர் .பழனியில் விற்பனை கண்காட்சி நடைபெற்றது இதுவே முதல் முறையாகும்.
இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன்
இதில் குறிப்பிடும்படியாக மதுரை திரு மங்கலத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹர்ஷன் என்பவர்ஓவியப்போட்டியிலும்,ஓவியக்கண்காட்சி மற்றும் விற்பனையிலும் பங்குபெற்று தனது படைப்புக்களை நல்ல விலைக்கு விற்று சென்றுள்ளார். மேலும் அதிகப்படியான கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு ஓவியத்தை வணிகமாக்கும் கலையினையும் நன்கு கற்று கொண்டனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் தனது புகைப் படத்துடன் இருந்தததால் பங்கேற்பவர்களை மகிழ்ச்சியுறச்செய்தது.இப்போட்டியில் முன்னரே முன் பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.ஆதலால் நேர்மையாக நடைபெற்றது.சூப்பர் ஆர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் சின்னப்பாபேசுகையில்
நான் படிக்கும் போதெல்லாம் இந்த மாதிரி வாய்ப்புக்களெல்லாம் கிடைக்கவில்லை.அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இதனை செய்தோம்.எனவும் மாணவர்களின் ஆர்வத்தினை பார்க்கும்போது இன்னமும் உழைத்திருக்கலாமோ என்று எண்ணம் தோன்றுகிறது . இதன் விளம்பரங்களை இணைய தளத்தில் மட்டுமே சென்றுள்ளதால் நிறைய மாவட்டங்களுக்கு தெரியவில்லை.வரும் காலங்களில் இதற்கு விடை சொல்லுகிற மாதிரி நிச்சயம் இருக்கும்.
இந்த மாதிரி தனித்திறமை இருக்கும் மாணவர்கள் யார் இருந்தாலும், என்னை தொடர் புக்கொள்ளலாம். ஆரோக்கியமான நாட்டினை உருவாக்கி அதில் நல்ல மனித நேயமிக்க மனிதர்களை உருவாக்கும் பணியினை நிச்சயம் சூப்பர் ஆர்ட்ஸ் அகாடமி நிறைவேற்றும்.என்று தன்னம்பிக்கையாக பேசியது அனைவரிடமும் உற்சாகம் தெரிந்தது, நன்றியுரை சமூக ஆர்வலர் திரு ஜெகன் எனபவர் கூறினார். தொடர்புக்கு 94435 57423
#dcbworldrecords #adjudicatorteam #adjudicator #dcbnews
#Newtalents #dcbCreativity #dcbindia #dcbtalents
#dcbadjudicator #dcbnews #dcbrecords #Creator #explore
#dcbinternationalrecordswrrf #editorsuriya #adjudicatorsuriya
மதிப்புறு முனைவர் ஆ .சூரியா
கருத்துகள்