முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விவேகானந்தா வித்யாலயாவில் வித்தியாசமான திருவிழா

 விவேகானந்தா வித்யாலயாவில்

வித்தியாசமான கலை திருவிழா 

பழனி சூப்பர் ஆர்ட்ஸ் அகாடமியும்,பழனி வர்ஷா சித்தா கிளினிக்கும் இணைந்து வழங்கிய ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் பங்கு பெற்ற மாநில அளவிலான ஓவியப்போட்டி மற்றும் ஓவியக்கண்காட்சி, ஒவியங்கள் விற்பனை நிகழ்வு பழனியில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது .

12.11.2022 சரியாக 7.00 மணிக்குள் நுழைவுசீட்டுடன் , வரிசையாக நின்று அமைதியாக பிராத்தனை அறைக்கு சென்றனர்.அங்கு அரைமணி  நேர பிராத்தனைக்கு பிறகு உடற்பயிற்சியினை செய்து காண்பித்து போட்டியில் கலந்து கொள்ள வந்தவர்களையும் செய்ய சொல்லி போட்டியினை தொடங்கி அனைவருக்குள்ளும் இருக்கும்  தன்னம்பிக்கையினை வளரச்செய்தது.

 நிகழ்ச்சி தொடக்கம் 


 நிகழ்ச்சியில் சூப்பர் ஆர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் சின்னப்பாஅவர்கள் 
 வரவேற்புரை வழங்க, பள்ளியின் தலைமையாசிரியர் திரு. காசி ஆறுமுகம் அவர்கள் முன்னிலை வகிக்க, இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக  சித்த மருத்துவர் மகேந்திரன் அவர்கள்  பங்கேற்று கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் மஞ்சப்பை மற்றும் ஆரோக்கிய கையேடையும் வழங்கினார். இந்நிகழ்வில் கே.ஜி முதல் கல்லூரி மாணவ,  மாணவிகளும்,இல்லத்தரசிகளும், ஓவியவேலை பார்ப்பவர்களும்,கலந்து கொண்டு தனது எண்ணங்களுக்கு உயிர் தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஓவியப்போட்டி காலை 9.00 மணிமுதல் 11.30 மணி வரை நடைபெற்றது.வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 70  மாணவ,  மாணவிகளும் ,நமது மாவட்டத்தில் 46  மாணவ,  மாணவிகளும் கலந்து கொண்டனர் .பழனியில் விற்பனை கண்காட்சி நடைபெற்றது  இதுவே முதல் முறையாகும்.  

இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் 

       இதில் குறிப்பிடும்படியாக மதுரை திரு மங்கலத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹர்ஷன் என்பவர்ஓவியப்போட்டியிலும்,ஓவியக்கண்காட்சி மற்றும் விற்பனையிலும் பங்குபெற்று தனது படைப்புக்களை நல்ல விலைக்கு விற்று சென்றுள்ளார்.  மேலும் அதிகப்படியான கல்லூரி மாணவிகள்  கலந்துகொண்டு ஓவியத்தை வணிகமாக்கும் கலையினையும் நன்கு கற்று கொண்டனர்.கலந்து கொண்ட அனைவருக்கும்  பங்கேற்பு சான்றிதழ்கள் தனது புகைப் படத்துடன் இருந்தததால் பங்கேற்பவர்களை மகிழ்ச்சியுறச்செய்தது.இப்போட்டியில் முன்னரே முன் பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.ஆதலால் நேர்மையாக நடைபெற்றது. 

 சூப்பர் ஆர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் சின்னப்பாபேசுகையில் 

நான் படிக்கும் போதெல்லாம் இந்த மாதிரி வாய்ப்புக்களெல்லாம் கிடைக்கவில்லை.அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இதனை செய்தோம்.எனவும் மாணவர்களின் ஆர்வத்தினை பார்க்கும்போது இன்னமும் உழைத்திருக்கலாமோ என்று எண்ணம் தோன்றுகிறது . இதன் விளம்பரங்களை இணைய தளத்தில் மட்டுமே சென்றுள்ளதால் நிறைய மாவட்டங்களுக்கு தெரியவில்லை.வரும் காலங்களில் இதற்கு விடை சொல்லுகிற மாதிரி நிச்சயம் இருக்கும். 





















இந்த மாதிரி தனித்திறமை இருக்கும் மாணவர்கள் யார் இருந்தாலும், என்னை தொடர் புக்கொள்ளலாம். ஆரோக்கியமான நாட்டினை உருவாக்கி அதில் நல்ல மனித நேயமிக்க மனிதர்களை உருவாக்கும் பணியினை நிச்சயம் சூப்பர் ஆர்ட்ஸ் அகாடமி நிறைவேற்றும்.என்று தன்னம்பிக்கையாக பேசியது அனைவரிடமும் உற்சாகம் தெரிந்தது, நன்றியுரை சமூக ஆர்வலர் திரு ஜெகன் எனபவர் கூறினார். தொடர்புக்கு 94435 57423

 #dcbworldrecords  #adjudicatorteam  #adjudicator  #dcbnews

#Newtalents #dcbCreativity  #dcbindia  #dcbtalents

 #dcbadjudicator  #dcbnews  #dcbrecords  #Creator  #explore

#dcbinternationalrecordswrrf  #editorsuriya  #adjudicatorsuriya

#dcbworldrecords #dcbwrrf  

                            

                                                                                                               மதிப்புறு முனைவர்  .சூரியா

                                                                 9442338099


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும், சூப்பர் ஆரட்ஸ் நிறுவனருமான சூப்பர் சின்னப்பா அவர்கள் தர்மம் வெல்லும்  எனும் வார்த்தைகளால் ஓவியம் வரைந்து அசத்தல்.. இன்று  பிறந்தநாள் விழா காணும் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் கட்சியின் தலைவர், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 அடி நீளமும் 10 அடி அகலமும்  கொண்ட பதாகையில் தொடர்ந்து 5 மணி நேரம் தர்மம் வெல்லும் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரின் படத்தினை வரைந்து விரைவில் பூரண நலம் பெற ஓவியக் கலைஞராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.          ஓவியத்தில் இது போன்ற முயற்சி முதன்மையானது. எனவும் இதற்கு முன்பு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்திருந்தாலும் அவற்றில் இது மிகவும் கடினமானதாகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார் இந்த ஓவியம் நிச்சயம் குணப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நாமும் நம்பிக்கையோடு வாழ்த்துவோம்5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும் சூப்பர் ஆரட்ஸ் நிறுவன வருமான சூப்பர் சின்னப்பா அவர்கள்

சதுரங்கத்தில் சாதனை சுபஸ்ரீ

  சதுரங்கத்தில் சாதனை சாதாரண கிராமத்தில் மண் வாசனையோடு களம் காண தெரியாமல் இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை அடையாளம் காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் . ஆனால்   அமரபூண்டியை சேர்ந்த மாற்றத்திற்கான மாற்றுத்திறனாளி , தன்னம்பிக்கை நாயகன் முருகானந்தம் அவர்கள் அவரது மூத்த மகளான சுபஸ்ரீயை அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் ( சதுரங்கம் )   பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் . திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை   பெற செய்துள்ளார் . ஆம் வாசகர்களே ..... விழிப்புணர்வு போட்டி கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்   ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது . அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது . இதில் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் அரசு உதவி

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் . #DcbTn #DcbTamilCulture #DcbTale