மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி சாதனை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், குப்பையில் தூக்கியெறியப்படும் குளூக்கோஸ் பாட்டில்களை விவசாயத்திற்குப் பயன்படுத்திச் சாதித்துள்ளார். நீரின்றி வாடும் பயிர்களை எப்படி காற்றப்போகிறோம் என்ற கவலையில் இருந்த விவசாயி பாரியா, வேளாண் நிபுணர்கள் உதவியுடன் சாதித்துள்ளார். வறட்சியால் வாடும் தானியப் பயிர்களைக் காப்பாற்ற சொட்டு நீர்ப்பாசனத்திற்கு குளூக்கோஸ் பாட்டில்களைப் பயன்படுத்தலாம் என்று நேஷனல் அக்ரிகல்ச்சுரல் இன்னோவேஷன் புராஜெக்ட் அமைப்பைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள், ஆலோசனை தெரிவித்தனர். இந்தப் புதுமையான சொட்டுநீர்ப் பாசனம் மூலம் ஒரு ஹெக்டேருக்கு விவசாயி பாரியா, 15,200 ரூபாய் லாபம் பார்த்திருக்கிறார். பயிர்களைக் காப்பாற்றியதோடு மட்டுமல்ல, நீரையும் வீணடிக்காமல் பயன்படுத்தி நீர் மேலாண்மை செய்திருக்கிறார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் பழங்குடி மக்கள் நிறைந்த ஜாப்பூவா மாவட்டத்தில் தானியங்களையும் காய்கறிகளையும் போதிய நீரில்லாமல் விவசாயம் செய்ய முடியாத சூழல். இதனையடுத்து, ரமேஷ் பாரியா போன்ற விவசாயிகள் புதுமையான நீர்ப்பாசன முறைகளுக்கு மாறியதால் வ...
World record news,special news,sports news, ,motivation, business news.